பக்குவமா சிரிக்கும் பாட்டி
படத்தை எடுக்கும் பேரன் பார்த்து
அப்படியே இந்த கட்டை எடுத்து
அங்கன வித்து காசாக்கி வா ராசா
சொல்லாமல் சொல்லி சிரிக்கும் சிரிப்பு
பாட்டிய பார்த்து நானும் பழகி கொண்டேன்
உழைப்புக்கு வயது ஒரு தடை அல்ல
நீங்க அசத்துங்க பாட்டி.
Friday, 11 June 2010
Thursday, 10 June 2010
எச்சரிக்கை - எழுதும்போது கவனம் தேவை
டிவிட்டரில் ஒரு கட்டிடத்தை தகர்க்கப் போவதாக, விளையாட்டாக, எழுதிய ஒருவருக்கு ஐந்து மாதம் சிறை தண்டனை அளித்துள்ளார்கள்.
எதை எழுதுவது; எதை எழுதாமல் தவிர்ப்பது என எப்படி தெரிந்து கொள்வது.
இதற்கென விதிமுறைகள் இருக்கிறது, ஆனால் அந்த விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
சுவராஸ்யமான வலைப்பூ எப்படி இருக்க வேண்டும்
இதோ ஒருவர் சொல்கிறார்,
தினமும் எழுதுவதை தவிர்த்து விட வேண்டுமாம், நாம் எழுதுவதில் எவருக்கும் ஆர்வம் இருப்பதில்லை, பின்னர் எதற்கு தினமும் எழுத வேண்டும் என்கிறார்.
சொந்த பெயரில் எழுதக் கூடாதாம். வலைப்பூவின் பெயர் சொங்கித்தனமாக இருக்க வேண்டுமாம்.
எவரையும் பற்றி எழுதக் கூடாதாம்.
சொந்த விபரங்களை ஒருபோதும் எழுதக் கூடாதாம். பொது இடத்தில் சொந்த விசயங்களை எதற்காக பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.
எந்த ஒரு விசயத்திலும் கருத்து சொல்வதை அறவே தவிர்த்து விட வேண்டுமாம். மற்றவர்கள் சொல்வதை இணைப்பு தருவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமாம். நடுநிலையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டுமாம். எவரையும் புண்படுத்தக் கூடாதாம்.
எவர் வருகிறார், என்ன படிக்கிறார், எந்த பக்கம் அதிகம் வாசிக்கப்பட்டது என்கிற கொடுமைகளை எல்லாம் எதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவைகளை எல்லாம் அழித்து விடுங்கள் என்கிறார் மேலும்.
பெரிய பெரிய படம் (பிலிம் காட்டுறதுன்னு சொல்வாங்க) காட்டுவதை நிறுத்த வேண்டுமாம். நான் பெரிய சிந்தனைவாதி என்கிற எண்ணமெல்லாம் மூட்டை கட்ட வேண்டுமாம். திறமை ஒன்றையும் அங்கீகரிக்காதாம்.
உங்களை பின்தொடர்பவர்கள் அவர்களை பின்தொடரவேண்டும் என்பதில்தான் அக்கறை இருக்கும், அதெல்லாம் எதற்கு என்கிறார்.
இவர் எழுதியதை எல்லாம் படித்த பிறகு எனது வலைப்பூவினை மூடுவதை தவிர வேறு வழியில்லை. ;)
எதை எழுதுவது; எதை எழுதாமல் தவிர்ப்பது என எப்படி தெரிந்து கொள்வது.
இதற்கென விதிமுறைகள் இருக்கிறது, ஆனால் அந்த விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
சுவராஸ்யமான வலைப்பூ எப்படி இருக்க வேண்டும்
இதோ ஒருவர் சொல்கிறார்,
தினமும் எழுதுவதை தவிர்த்து விட வேண்டுமாம், நாம் எழுதுவதில் எவருக்கும் ஆர்வம் இருப்பதில்லை, பின்னர் எதற்கு தினமும் எழுத வேண்டும் என்கிறார்.
சொந்த பெயரில் எழுதக் கூடாதாம். வலைப்பூவின் பெயர் சொங்கித்தனமாக இருக்க வேண்டுமாம்.
எவரையும் பற்றி எழுதக் கூடாதாம்.
சொந்த விபரங்களை ஒருபோதும் எழுதக் கூடாதாம். பொது இடத்தில் சொந்த விசயங்களை எதற்காக பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.
எந்த ஒரு விசயத்திலும் கருத்து சொல்வதை அறவே தவிர்த்து விட வேண்டுமாம். மற்றவர்கள் சொல்வதை இணைப்பு தருவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமாம். நடுநிலையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டுமாம். எவரையும் புண்படுத்தக் கூடாதாம்.
எவர் வருகிறார், என்ன படிக்கிறார், எந்த பக்கம் அதிகம் வாசிக்கப்பட்டது என்கிற கொடுமைகளை எல்லாம் எதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவைகளை எல்லாம் அழித்து விடுங்கள் என்கிறார் மேலும்.
பெரிய பெரிய படம் (பிலிம் காட்டுறதுன்னு சொல்வாங்க) காட்டுவதை நிறுத்த வேண்டுமாம். நான் பெரிய சிந்தனைவாதி என்கிற எண்ணமெல்லாம் மூட்டை கட்ட வேண்டுமாம். திறமை ஒன்றையும் அங்கீகரிக்காதாம்.
உங்களை பின்தொடர்பவர்கள் அவர்களை பின்தொடரவேண்டும் என்பதில்தான் அக்கறை இருக்கும், அதெல்லாம் எதற்கு என்கிறார்.
இவர் எழுதியதை எல்லாம் படித்த பிறகு எனது வலைப்பூவினை மூடுவதை தவிர வேறு வழியில்லை. ;)
Wednesday, 9 June 2010
தேடிக்கொண்ட விசயங்கள் - 2
2. இயற்பியலோடு சில வார்த்தைகள்
இயற்பியல் பற்றி நினைத்துப் பார்க்கையில் எனக்குச் சொல்லித் தராத இராமமூர்த்தி ஆசிரியரும், இயற்பியல் சொல்லித் தந்த பாலசுப்பிரமணியன் ஆசிரியரும் நினைவுக்கு வருவார்கள். அறிவியலை தற்போது பல வகைகளாக பிரித்து வைத்துப் பார்த்தாலும் வேதியியல், இயற்பியல், உயிரியல் (விலங்கியல், தாவரவியல்) என இவற்றை அடிப்படையாக கொண்டு எல்லாம் விளங்கிக் கொள்ளப்பட்டன. வேதியியலும் உயிரியியலும் விளங்கிக் கொள்ளாத முடியாத விசயங்களை இந்த இயற்பியல் விளங்கிக் கொள்ள பெரும் வழி வகுத்தது எனலாம். விசை, சக்தி இவை இரண்டும் இயற்பியலை வேதியியலுக்கும் உயிரியியலுக்கும் ஆசானாக அமர்த்திக் கொள்ளச் செய்தது. தற்போது ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு எண்ணற்ற விசயங்கள் தெளிவு நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.
'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது' ஆற்றலானது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுபாடு அடையுமே தவிர அழிந்து போகாது என்பதை அறிந்து கொண்டவர்கள், ஆற்றலின் மூலம் எது என நிச்சயம் கேட்கமாட்டார்கள். அப்படி ஒருவேளை கேட்பார்களேயானால் ஆற்றலின் மூலமானது ஈர்ப்பு விசை ஆற்றல் என உறுதியாக சொல்ல முடியும். இதை எந்த கண்ணோட்டத்தில், அதாவது அறிவியல் மற்றும் உணர்வுப்பூர்வமாக, நோக்கினாலும் இந்த ஈர்ப்பு விசை ஆற்றல்தான் என்பதை அறுதியிட்டுக் கொள்ளலாம்.
ஈர்ப்பு விசை ஆற்றலுக்கு மூலமாக என்ன இருந்து இருக்க முடியும் என எண்ணிப் பார்த்தால் எதுவுமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஈர்ப்பு விசை ஆற்றலுடன் இணைந்து இருந்த ஆற்றலானது வேதிவினை ஆற்றல். அத்துடன் மூன்றாவதாக இருந்த ஆற்றலானது இலகுவாதல் ஆற்றல். இதனால்தான் இந்த மூன்று ஆற்றல்களையும் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆற்றல் என்கிறோம்.
1. ஈர்ப்புவிசை ஆற்றல்
2. வேதிவினை ஆற்றல்
3. இலகுவாதல் ஆற்றல்
இதன் அடிப்படையில்தான் உலகம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என அறிவியலாளர்களால் இயல்பாக விளக்க முடிந்தது.
ஈர்ப்புவிசை ஆற்றலால் வாயு ஒன்று அருகில் வந்தது, அழுத்தம் கொண்டது, ஈர்ப்பு விசை ஆற்றல், வேதிவினை ஆற்றலை எழுப்பி விட்டது, வேதிவினை ஆற்றல் வெடித்து சிதறியதுடன் இலகுவாதல் ஆற்றல் விழித்துக் கொண்டது. பிரபஞ்சம் இலகுவாகிக் கொண்டே இன்னும் இருக்கிறது.
இயக்கமற்று இருந்த ஈர்ப்பு விசை ஆற்றலால், இயக்க ஆற்றல் ஏற்பட்டு, வேதிவினை ஆற்றலால் உருவானதுதான் ஒளி ஆற்றல் மற்றும் ஒலி ஆற்றல். இந்த ஒளி ஆற்றலானது, மின்சார ஆற்றலுக்கு வழி காட்டியது. வேதிவினை ஆற்றலின் கோர வடிவமே நியூக்ளியர் ஆற்றல், இதை கருவினை ஆற்றல் என சொல்வோம்.
4. இயக்க ஆற்றல்
5. ஒளி ஆற்றல்
6. ஒலி ஆற்றல்
7. கருவினை ஆற்றல்
8. மின்சார ஆற்றல்
ஈர்ப்புவிசை ஆற்றலுக்கு இணையாக காந்த ஆற்றலையும் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்த காந்த ஆற்றலானது உருவாக பல வருடங்கள் ஆனது, ஆனால் இந்த காந்த ஆற்றல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இயல்புநிலை வாழ்க்கையில் இந்த ஆற்றலானது ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மிடம் இருந்துகொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த வெப்ப ஆற்றல் ஒன்றே உலகம் உருவாக காரணம் என கருத வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மாசுக்களும் தூசுக்களும் ஒன்றையொன்றை கவர்ந்திழுத்துக்கொண்டன. அப்படி எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின்னர் வருடங்கள் செல்ல செல்ல இறுக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
பொதுவாக எதிர்துகள் எதிர்துகளிலிருந்து விலகி ஓடும். நேர்துகள் எதிர்துகளுடன் ஒட்டிக்கொள்ளும். இப்படி இருந்தபோது ஹைட்ரஜனில் கருவில் ஏற்பட்ட மாற்றம் பெரிய கரு வினையாக அமைந்து உள்ளது. இப்படி மாற்றங்கள் உருவானபோது புதிய துகள்கள் இருந்த துகள்களிருந்து எந்த வித மாற்றம் இன்றி உருவாகத் தொடங்கி இருக்கின்றன. அதாவது ஒரு புரோட்டானிலிருந்த்து அதே நிறையுள்ள மற்றொரு புரோட்டான். இப்படி உருவானபோது எந்த ஈர்ப்பும் இல்லாத ஒரு துகளும் உருவாகத் தொடங்கி இருக்கிறது. அப்பொழுது வெளிப்பட ஆரம்பித்த வெப்ப ஆற்றல் ஒட்டிய அனைத்தையும் பறக்கச் செய்து இருக்கிறது.
இப்படி வெப்ப ஆற்றல் ஒரு சின்ன தனிமத்திலிருந்து பெரிய தனிமம்வரை உருவாகியதும் இதே வினை தொடர்ந்து நிகழ்ந்து இருக்கிறது. இப்படித்தான் ஒரு சூரியன் உருவாகி இருக்கிறது என்கிறார்கள்.
அப்படி உருவான சூரியன் என்னவாகிறது? சூரியக்கதிர்கள் யாவை எனத் தொடரலாம்.
இயற்பியல் பற்றி நினைத்துப் பார்க்கையில் எனக்குச் சொல்லித் தராத இராமமூர்த்தி ஆசிரியரும், இயற்பியல் சொல்லித் தந்த பாலசுப்பிரமணியன் ஆசிரியரும் நினைவுக்கு வருவார்கள். அறிவியலை தற்போது பல வகைகளாக பிரித்து வைத்துப் பார்த்தாலும் வேதியியல், இயற்பியல், உயிரியல் (விலங்கியல், தாவரவியல்) என இவற்றை அடிப்படையாக கொண்டு எல்லாம் விளங்கிக் கொள்ளப்பட்டன. வேதியியலும் உயிரியியலும் விளங்கிக் கொள்ளாத முடியாத விசயங்களை இந்த இயற்பியல் விளங்கிக் கொள்ள பெரும் வழி வகுத்தது எனலாம். விசை, சக்தி இவை இரண்டும் இயற்பியலை வேதியியலுக்கும் உயிரியியலுக்கும் ஆசானாக அமர்த்திக் கொள்ளச் செய்தது. தற்போது ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு எண்ணற்ற விசயங்கள் தெளிவு நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.
'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது' ஆற்றலானது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுபாடு அடையுமே தவிர அழிந்து போகாது என்பதை அறிந்து கொண்டவர்கள், ஆற்றலின் மூலம் எது என நிச்சயம் கேட்கமாட்டார்கள். அப்படி ஒருவேளை கேட்பார்களேயானால் ஆற்றலின் மூலமானது ஈர்ப்பு விசை ஆற்றல் என உறுதியாக சொல்ல முடியும். இதை எந்த கண்ணோட்டத்தில், அதாவது அறிவியல் மற்றும் உணர்வுப்பூர்வமாக, நோக்கினாலும் இந்த ஈர்ப்பு விசை ஆற்றல்தான் என்பதை அறுதியிட்டுக் கொள்ளலாம்.
ஈர்ப்பு விசை ஆற்றலுக்கு மூலமாக என்ன இருந்து இருக்க முடியும் என எண்ணிப் பார்த்தால் எதுவுமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஈர்ப்பு விசை ஆற்றலுடன் இணைந்து இருந்த ஆற்றலானது வேதிவினை ஆற்றல். அத்துடன் மூன்றாவதாக இருந்த ஆற்றலானது இலகுவாதல் ஆற்றல். இதனால்தான் இந்த மூன்று ஆற்றல்களையும் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆற்றல் என்கிறோம்.
1. ஈர்ப்புவிசை ஆற்றல்
2. வேதிவினை ஆற்றல்
3. இலகுவாதல் ஆற்றல்
இதன் அடிப்படையில்தான் உலகம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என அறிவியலாளர்களால் இயல்பாக விளக்க முடிந்தது.
ஈர்ப்புவிசை ஆற்றலால் வாயு ஒன்று அருகில் வந்தது, அழுத்தம் கொண்டது, ஈர்ப்பு விசை ஆற்றல், வேதிவினை ஆற்றலை எழுப்பி விட்டது, வேதிவினை ஆற்றல் வெடித்து சிதறியதுடன் இலகுவாதல் ஆற்றல் விழித்துக் கொண்டது. பிரபஞ்சம் இலகுவாகிக் கொண்டே இன்னும் இருக்கிறது.
இயக்கமற்று இருந்த ஈர்ப்பு விசை ஆற்றலால், இயக்க ஆற்றல் ஏற்பட்டு, வேதிவினை ஆற்றலால் உருவானதுதான் ஒளி ஆற்றல் மற்றும் ஒலி ஆற்றல். இந்த ஒளி ஆற்றலானது, மின்சார ஆற்றலுக்கு வழி காட்டியது. வேதிவினை ஆற்றலின் கோர வடிவமே நியூக்ளியர் ஆற்றல், இதை கருவினை ஆற்றல் என சொல்வோம்.
4. இயக்க ஆற்றல்
5. ஒளி ஆற்றல்
6. ஒலி ஆற்றல்
7. கருவினை ஆற்றல்
8. மின்சார ஆற்றல்
ஈர்ப்புவிசை ஆற்றலுக்கு இணையாக காந்த ஆற்றலையும் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்த காந்த ஆற்றலானது உருவாக பல வருடங்கள் ஆனது, ஆனால் இந்த காந்த ஆற்றல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இயல்புநிலை வாழ்க்கையில் இந்த ஆற்றலானது ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மிடம் இருந்துகொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த வெப்ப ஆற்றல் ஒன்றே உலகம் உருவாக காரணம் என கருத வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மாசுக்களும் தூசுக்களும் ஒன்றையொன்றை கவர்ந்திழுத்துக்கொண்டன. அப்படி எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின்னர் வருடங்கள் செல்ல செல்ல இறுக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
பொதுவாக எதிர்துகள் எதிர்துகளிலிருந்து விலகி ஓடும். நேர்துகள் எதிர்துகளுடன் ஒட்டிக்கொள்ளும். இப்படி இருந்தபோது ஹைட்ரஜனில் கருவில் ஏற்பட்ட மாற்றம் பெரிய கரு வினையாக அமைந்து உள்ளது. இப்படி மாற்றங்கள் உருவானபோது புதிய துகள்கள் இருந்த துகள்களிருந்து எந்த வித மாற்றம் இன்றி உருவாகத் தொடங்கி இருக்கின்றன. அதாவது ஒரு புரோட்டானிலிருந்த்து அதே நிறையுள்ள மற்றொரு புரோட்டான். இப்படி உருவானபோது எந்த ஈர்ப்பும் இல்லாத ஒரு துகளும் உருவாகத் தொடங்கி இருக்கிறது. அப்பொழுது வெளிப்பட ஆரம்பித்த வெப்ப ஆற்றல் ஒட்டிய அனைத்தையும் பறக்கச் செய்து இருக்கிறது.
இப்படி வெப்ப ஆற்றல் ஒரு சின்ன தனிமத்திலிருந்து பெரிய தனிமம்வரை உருவாகியதும் இதே வினை தொடர்ந்து நிகழ்ந்து இருக்கிறது. இப்படித்தான் ஒரு சூரியன் உருவாகி இருக்கிறது என்கிறார்கள்.
அப்படி உருவான சூரியன் என்னவாகிறது? சூரியக்கதிர்கள் யாவை எனத் தொடரலாம்.
Subscribe to:
Posts (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...