ஐவரும் இவர்களையேப் பார்த்தார்கள். அவர்களை சின்னச்சாமி நேருக்கு நேராய் பார்த்தார். கண்கள் மூடிய அகிலா கண்கள் திறந்தாள். அதில் ஒருவன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். சின்னச்சாமி அகிலா பக்கம் திரும்பினார். அகிலா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவனைச் சுற்றி நின்ற மற்றவர்கள் புன்னகை புரிந்தார்கள். நீ மிகவும் புத்திசாலி பெண் என ஆங்கிலத்தில் பேசியவன் பாராட்டினான். அகிலா ஆஞ்சநேயருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டாள்.
தனது சட்டைப் பையிலிருந்து வேகமாக ஒரு காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்தவன் தனது முகவரியையும் எப்படி அந்த இடத்திற்கு வருவது குறித்தும் எழுதி அகிலாவிடம் தந்தான். பின்னர் சின்னச்சாமியைப் பார்த்து இந்த பெண்ணை உனது மனைவியாக பெற்றதால் நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன் என ஆங்கிலத்தில் சொன்னான். சின்னச்சாமி 'சாரு என்ன சொல்றாரு' என்பது போல் அகிலாவைப் பார்த்தார். அடுத்த நொடியில் சின்னச்சாமிக்கு, கைகள் கூப்பி வணங்கிய அந்த ஐவரின் செய்கை சற்று வியப்பூட்டியது. வெகுவேகமாக நடந்து கடந்தார்கள். சின்னச்சாமி அகிலாவிடம் விசாரிக்கத் தொடங்கினார்.
''அவங்க ஐஞ்சு பேரும் அண்ணன் தம்பிகளாம், அவங்க அம்மா ஒரே ஒரு பெண்ணைத்தான் அந்த ஐஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறனும்னு கண்டிப்பா சொல்லிட்ட்டாங்களாம், ஆனா எந்த ஒரு பெண்ணுமே அப்படி கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாறாங்களாம் அதனால அவங்க அம்மா வேதனையில இருக்காங்களாம். அவங்க அம்மா சொன்னாங்கனு யாரையாவது கடத்தியாவது கல்யாணம் செய்யலாம்னு நினைச்சி இந்த நைல் நதி பக்கம் வாகனத்துல வந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு நடப்பாங்களாம், ஆனா யாரும் இரண்டுமாசமா கண்ணுக்கு சிக்கலை என்ன பண்றது தெரியலைனு சொன்னாங்க''
''அகிலா மஹாபாரதம் சொல்றியா நீ''
''இல்லை நிசமாத்தான் சொல்றேன், வேணும்னா நாம இந்த அட்ரஸுக்குப் போய் பார்ப்போம்''
''அப்படியா, நீ என்ன சொன்ன''
''ஒரு பெண்ணை பார்த்து விசயத்தைச் சொல்லுங்க, ஐஞ்சு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்றதா அம்மா முன்னால கல்யாணம் பண்ணுங்க, ஆனா அந்த பொண்ணோட புருஷனா ஒருத்தர் மட்டும் இருங்க, மத்தவங்க வேற வேற ஊருக்குப் போய் அவங்க அவங்க ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருங்கனு சொன்னேன்''
''என்ன சொன்னாங்க அதுக்கு''
''அருமையான யோசனை, புத்திசாலினு என்னை சொன்னாங்க''
''நீ மஹாபாரதத்தை காப்பி பண்ணி சொல்றியா''
''எப்படி சொன்னா என்ன, அவங்கதான் சந்தோசமா போயிட்டாங்களே''
''இல்லை அவங்க பேசினது வேற, நீ இப்படி சொல்ற''
''உங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமே அப்புறம் ஏன் இப்படி கேட்கறீங்க''
''எனக்குப் புரியலை''
வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அகிலா சின்னச்சாமியை அழைத்துக்கொண்டு விடுதிக்கு திரும்ப எத்தனித்தாள்.
''சொல்லு என்ன சொன்னாங்க''
''சோதனையாப் போச்சு, அதான் சொன்னாங்க, நாளைக்கு அவங்க வீட்டுக்கே போகலாம் போதுமா''
சின்னச்சாமி சமாதனம் அடையாதவராய் அகிலாவுடன் நடந்தார். அகிலாவுடன் அவர்கள் தந்த முகவரிக்குச் செல்ல விருப்பமில்லை. சின்னச்சாமி யோசனையில் ஆழ்ந்தார். மின்னல் வெட்டியது. தூறல் மண்ணைத் தொட்டது. விடுதியை அடைந்தனர். அன்றைய இரவு இன்ப இரவாக கழிந்தது. காலையில் எழுந்து குளித்துவிட்டு வெளியே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. அகிலா சின்னச்சாமியிடம் அந்த நபர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக கூறினார்.
''நீயா தொலையனும்னு ஆசைப்படற''
''காலங்கார்த்தால என்ன வார்த்தை இது''
''சரி சரி சேர்ந்தே தொலைவோம்''
அகிலாவும் சின்னச்சாமியும் சாலைகளின் வழியே பயணித்தபோது பிரமிடுகள் அவரவர் கண்ணுக்குள் சின்னதாய் தெரிந்தது. பாழடைந்த கோவில்கள் தென்பட்டன. அதிகாலைப் பயணம் இதமாக இருந்தது. பயணம் செய்த வாகனம் பயணித்தே கொண்டிருந்தது. சஹாரா பாலைவனம் தென்பட்டது. நைல் நதியை ஒட்டியே பாலைவனம் இருந்தது தெரிந்தது. வாகன ஓட்டியிடம் அகிலா முகவரி இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டாள். வாகன ஓட்டி இன்னும் பத்து நிமிடம் ஆகுமென்றார்.
சின்னச்சாமிக்கு தலை கிறுகிறுத்தது.ஒருவழியாய் அந்த இடத்தை அடைந்தபோது வெகு சில குடிசைகளே இருந்தது. ஒரு பக்கம் நைல்நதி. மறுபக்கம் சஹாரா பாலைவனம். அங்கே இறங்கி வாகன ஓட்டியை காத்திருக்கச் சொல்லிவிட்டு நடந்தனர். வழியில் கண்ட ஒருவரிடம் முகவரியைக் காட்ட வாசிக்கத் தெரியாது என சைகை காட்டிச் சென்றார்.
அப்பொழுது ஆங்கிலம் பேசியவன் தென்பட்டான். இவர்களை அடையாளம் கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குடிசையாய் வெளியே தெரிந்தாலும் உள்ளே பெரிய குகையாய் காட்சி அளித்தது. சின்னச்சாமி திடுக்கிட்டார். அகிலாவிற்கு பயமாக இருந்தது. வெளியில் வாகனம் கிளம்பும் சப்தம் கேட்டது.
(தொடரும்)
Tuesday, 17 February 2009
Monday, 16 February 2009
பழங்காலச் சுவடுகள் - 3
குளித்துவிட்டு வெளியே வந்த அகிலா அறையினில் சின்னச்சாமி இல்லாதது கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தாள். கதவைத் திறந்திட முயற்சித்தபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். பொதுவாக வெளியில் கதவை பூட்டினால் உள்ளிருந்து திறக்கும் வண்ணம்தான் பெரும்பாலான விடுதிகளில் வைத்திருப்பார்கள், ஆனால் இங்கு அப்படியில்லாமல் இருந்தது. அகிலா அச்சம் அடைந்தாள். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யாமல் உடைகள் மாற்றிக்கொண்டு சகஸ்ர நாமம் சொல்ல ஆரம்பித்தாள். சின்னச்சாமி சில உணவுப்பொருட்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார். அகிலா, சின்னச்சாமியின் கைகளில் இருந்த பொட்டலங்களைப் பார்த்தாள்.
''வெளியே போனா சொல்லிட்டுப் போங்க''
''நீ குளிச்சி முடிக்கிறதுக்குள்ள திரும்பிரலாம்னு நினைச்சேன்''
''பயந்துட்டேன்''
''பயம் வரத்தானேச் செய்யும்''
''என்ன சொல்றீங்க''
''நான் உன்னைத் தொலைக்கமாட்டேனு உனக்கு நம்பிக்கை வரவரைக்கும் பயம் வரத்தானேச் செய்யும்''
''கடவுளை வேண்டிக்கிற ஆரம்பிச்சிட்டேன்''
''காப்பாத்துவார்னு நம்பிக்கையா''
''நீங்க என்னைத் தொலைக்கவிடமாட்டாருனு நம்பிக்கை''
''நான் குளிச்சிட்டு வரேன்''
''நான் வெளியே போகமாட்டேன்''
இருவரும் சிரித்தார்கள். இருவருக்குமான நெருங்கிய அன்பு மேலும் அதிகரித்தது. வருடங்கள் ஆக ஆக அன்பு அதிகரிக்க வேண்டும். சின்னச்சாமி குளித்துவிட்டு வந்தார். இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். அகிலா கண் அயர்ந்தாள். சின்னச்சாமி குறிப்பு எழுதத் தொடங்கினார்.
'எகிப்து நாட்டின் விமானத்தளத்தில் எங்களை வரவேற்க யாரும் இல்லை, ஆனால் நிறைய மனிதர்கள் தென்பட்டார்கள். அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். சிலர் புன்னகைத்தார்கள், சிலர் முகம் திருப்பிக்கொண்டார்கள். வெளியில் வந்ததும் புதிய புதிய கட்டிடங்கள் பழங்கால எகிப்து எப்படி இருந்து இருக்கும் என்பதை முற்றிலுமாக மறைத்துவிட்டது. கட்டிடங்கள் வானை நோக்கி வளர்ந்து கொண்டு இருந்தது. பூமிக்குத்தான் ஈர்ப்பு சக்தி இருக்கும் என்றில்லை, வானுக்கும் உண்டு என்பதுபோல் அந்த கட்டிடங்கள் அமைந்து இருந்தது.
நகரங்கள் செல்வச் செழிப்புடன் இருந்தது. மக்கள் வேகமாக பயணித்தனர். எகிப்து நாட்டின் கைரோ விடுதியில் அமர்ந்து இருப்பது, திருநெல்வேலியில் சென்ற வருடம் தங்கியிருந்த விடுதியைப் போல் இருந்தது. அங்கே தாமிரபரணி ஆறு, இங்கே நைல் நதி'
அகிலா சட்டென விழித்தாள். சின்னச்சாமி மும்முரமாக எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
''என்ன எழுதறீங்க''
''உனக்கு கடைசி கடிதம் எழுதறேன், உன்னை விட்டுட்டு ஓடிப்போக தயாராயிட்டேன்''
''கொடுங்க பார்ப்போம்''
'இந்தா''
அகிலா படித்துப் பார்த்தாள்.
''இதுக்கு எதுக்கு இத்தனை செலவழிச்சி இவ்வளவு தூரம் வரனும்''
''இங்க வராட்டி தெரிஞ்சிருக்காது, சாயந்திரமா நைல் நதிக்குப் போவோம்''
''என்னைத் தள்ளிவிடமாட்டீங்களே''
''என்னை பயமுறுத்திட்டே இருக்க, நீ இப்படியே பேசினா எனக்கு அந்த நினைப்பு வந்தாலும் வரும்''
அகிலா அமைதியானாள். இருவரும் மாலை நேரத்தில் விடுதியிலிருந்து நடந்து நைல் நதியினை அடைந்தார்கள். அந்த இடத்தில் ஆள் அரவமற்று இருந்தது. காற்று சிலுசிலுவென அடித்தது. நதியின் ஓரமாகவே இருவரும் நடந்தார்கள்.
''அந்த காலத்தில நைல் நதியை ஒட்டியேதான் மக்கள் வாழ்ந்து இருக்காங்க, நைல் நதிதான் கடவுள். நைல் நதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளை அழிச்சி இருக்கு, அப்போ கடவுள் கோபிக்கிறார்னு நினைக்கிறாங்க, மனித நாகரிகம் தொடங்கினது இங்கதானு சொல்வாங்க, அது மட்டுமில்லாம சமய கோட்பாடுகள் எதுவும் இல்லாத சமூகமாகத்தான் இருந்து இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய் வாழ்ந்திருக்காங்க''
''எந்த புத்தகத்தில படிச்சீங்க, இப்ப நீங்களும் நானும் இருக்கற மாதிரி''
''ஆமா ஆமா நீயும் நானும் மாதிரி, ஆனா அப்போ மொத்த சமூகம்''''எப்படி மாறிச்சி''
''பேராசை, தானே பெரியவன், தனக்கே எல்லாம் தெரியும் அப்படிங்கிற அகந்தை''
சின்னச்சாமி அகிலாவைத் தோளில் தொட்டார். அகிலா சின்னச்சாமியின் கைகளைத் தட்டிவிட்டார்.
''இந்த பயம் தான் அன்பை அடியோட அழிக்க பயன்பட்ட முதல் ஆயுதம். தற்காப்புனு சொல்லி அழிவைத் தொடங்கி வைச்ச பெரும் ஆயுதம்''
அகிலா திடுக்கிட்டாள். சும்மாதானே கையைத் தட்டிவிட்டோம், இப்படி நினைக்கிறாரே இந்த மனுசன் என நினைக்கத் தோன்றியது. சின்னச்சாமி ஈரம் எனப் பார்க்காமல் அங்கேயே அமர்ந்தார். அகிலாவும் உடன் அமர்ந்தாள். தொலைவில் யாரோ வருவதுபோல் இருந்தது. ஐந்து நபர்கள் இவர்களின் அருகில் வந்ததும் இவர்கள் எழுந்து கொண்டார்கள். அகிலாவுக்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது. ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம் மனதில் சொல்ல ஆரம்பித்தாள்.
(தொடரும்)
''வெளியே போனா சொல்லிட்டுப் போங்க''
''நீ குளிச்சி முடிக்கிறதுக்குள்ள திரும்பிரலாம்னு நினைச்சேன்''
''பயந்துட்டேன்''
''பயம் வரத்தானேச் செய்யும்''
''என்ன சொல்றீங்க''
''நான் உன்னைத் தொலைக்கமாட்டேனு உனக்கு நம்பிக்கை வரவரைக்கும் பயம் வரத்தானேச் செய்யும்''
''கடவுளை வேண்டிக்கிற ஆரம்பிச்சிட்டேன்''
''காப்பாத்துவார்னு நம்பிக்கையா''
''நீங்க என்னைத் தொலைக்கவிடமாட்டாருனு நம்பிக்கை''
''நான் குளிச்சிட்டு வரேன்''
''நான் வெளியே போகமாட்டேன்''
இருவரும் சிரித்தார்கள். இருவருக்குமான நெருங்கிய அன்பு மேலும் அதிகரித்தது. வருடங்கள் ஆக ஆக அன்பு அதிகரிக்க வேண்டும். சின்னச்சாமி குளித்துவிட்டு வந்தார். இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். அகிலா கண் அயர்ந்தாள். சின்னச்சாமி குறிப்பு எழுதத் தொடங்கினார்.
'எகிப்து நாட்டின் விமானத்தளத்தில் எங்களை வரவேற்க யாரும் இல்லை, ஆனால் நிறைய மனிதர்கள் தென்பட்டார்கள். அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். சிலர் புன்னகைத்தார்கள், சிலர் முகம் திருப்பிக்கொண்டார்கள். வெளியில் வந்ததும் புதிய புதிய கட்டிடங்கள் பழங்கால எகிப்து எப்படி இருந்து இருக்கும் என்பதை முற்றிலுமாக மறைத்துவிட்டது. கட்டிடங்கள் வானை நோக்கி வளர்ந்து கொண்டு இருந்தது. பூமிக்குத்தான் ஈர்ப்பு சக்தி இருக்கும் என்றில்லை, வானுக்கும் உண்டு என்பதுபோல் அந்த கட்டிடங்கள் அமைந்து இருந்தது.
நகரங்கள் செல்வச் செழிப்புடன் இருந்தது. மக்கள் வேகமாக பயணித்தனர். எகிப்து நாட்டின் கைரோ விடுதியில் அமர்ந்து இருப்பது, திருநெல்வேலியில் சென்ற வருடம் தங்கியிருந்த விடுதியைப் போல் இருந்தது. அங்கே தாமிரபரணி ஆறு, இங்கே நைல் நதி'
அகிலா சட்டென விழித்தாள். சின்னச்சாமி மும்முரமாக எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
''என்ன எழுதறீங்க''
''உனக்கு கடைசி கடிதம் எழுதறேன், உன்னை விட்டுட்டு ஓடிப்போக தயாராயிட்டேன்''
''கொடுங்க பார்ப்போம்''
'இந்தா''
அகிலா படித்துப் பார்த்தாள்.
''இதுக்கு எதுக்கு இத்தனை செலவழிச்சி இவ்வளவு தூரம் வரனும்''
''இங்க வராட்டி தெரிஞ்சிருக்காது, சாயந்திரமா நைல் நதிக்குப் போவோம்''
''என்னைத் தள்ளிவிடமாட்டீங்களே''
''என்னை பயமுறுத்திட்டே இருக்க, நீ இப்படியே பேசினா எனக்கு அந்த நினைப்பு வந்தாலும் வரும்''
அகிலா அமைதியானாள். இருவரும் மாலை நேரத்தில் விடுதியிலிருந்து நடந்து நைல் நதியினை அடைந்தார்கள். அந்த இடத்தில் ஆள் அரவமற்று இருந்தது. காற்று சிலுசிலுவென அடித்தது. நதியின் ஓரமாகவே இருவரும் நடந்தார்கள்.
''அந்த காலத்தில நைல் நதியை ஒட்டியேதான் மக்கள் வாழ்ந்து இருக்காங்க, நைல் நதிதான் கடவுள். நைல் நதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளை அழிச்சி இருக்கு, அப்போ கடவுள் கோபிக்கிறார்னு நினைக்கிறாங்க, மனித நாகரிகம் தொடங்கினது இங்கதானு சொல்வாங்க, அது மட்டுமில்லாம சமய கோட்பாடுகள் எதுவும் இல்லாத சமூகமாகத்தான் இருந்து இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய் வாழ்ந்திருக்காங்க''
''எந்த புத்தகத்தில படிச்சீங்க, இப்ப நீங்களும் நானும் இருக்கற மாதிரி''
''ஆமா ஆமா நீயும் நானும் மாதிரி, ஆனா அப்போ மொத்த சமூகம்''''எப்படி மாறிச்சி''
''பேராசை, தானே பெரியவன், தனக்கே எல்லாம் தெரியும் அப்படிங்கிற அகந்தை''
சின்னச்சாமி அகிலாவைத் தோளில் தொட்டார். அகிலா சின்னச்சாமியின் கைகளைத் தட்டிவிட்டார்.
''இந்த பயம் தான் அன்பை அடியோட அழிக்க பயன்பட்ட முதல் ஆயுதம். தற்காப்புனு சொல்லி அழிவைத் தொடங்கி வைச்ச பெரும் ஆயுதம்''
அகிலா திடுக்கிட்டாள். சும்மாதானே கையைத் தட்டிவிட்டோம், இப்படி நினைக்கிறாரே இந்த மனுசன் என நினைக்கத் தோன்றியது. சின்னச்சாமி ஈரம் எனப் பார்க்காமல் அங்கேயே அமர்ந்தார். அகிலாவும் உடன் அமர்ந்தாள். தொலைவில் யாரோ வருவதுபோல் இருந்தது. ஐந்து நபர்கள் இவர்களின் அருகில் வந்ததும் இவர்கள் எழுந்து கொண்டார்கள். அகிலாவுக்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது. ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம் மனதில் சொல்ல ஆரம்பித்தாள்.
(தொடரும்)
பழங்காலச் சுவடுகள் - 2
''என்னங்க நாம தெரியாத ஊருக்குப் போறோமே அங்க யாராவது நம்மளை ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது''
''என்ன திடீருனு இந்த யோசனை''
''மாமா நம்மளை போக வேணாம்னு சொன்னாரே அதான் ஒரே யோசனையா இருந்தது''
''இராத்திரி நேரம் ஆனாலே பயம் வந்துருமே, என் அப்பாவுக்கு ஞாபக மறதி அதிகமாகிட்டே வருது அதான் அப்படி சொல்லிருக்கிறாரு, நீ தைரியமா தூங்கு, படத்தில வர மாதிரி எகிப்துக்கு கனவுல போய்ட்டு வந்துராத''
''உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான்''
அந்த இரவில் தங்களது அறையில் சின்னச்சாமியும் அகிலாவும் பேசிக்கொண்டார்கள். சிறிது நேரத்தில் அறை நிசப்தமானது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அதிகாலைப் பொழுதில் எழுந்த சின்னச்சாமி வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தார், வெள்ளம் போல் தண்ணீர் வீட்டினை சூழ்ந்து கொண்டிருந்தது. படகு ஒன்றை வாங்கி வைக்க வேண்டும் என வீட்டுத்தரகர் சொன்னது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. இரண்டு மணி நேரத்தில் பாதை சரியாகிவிடும் என்று மீண்டும் தனது அறைக்கு வந்து படுத்துக்கொண்டார்.
''என்னங்க எழுந்துச்சா''
''இல்லை இனிமேதான் தூங்கனும்''
''மணி எத்தனை''
''நாலு''
''பிளைட்டுக்கு நேரமாச்சா''
''அது நாளைக்கு, இப்போ நீ தூங்கு''
சின்னச்சாமி எகிப்து பற்றிய சிந்தனையில் இருந்தார். எகிப்து நாட்டிற்கு ஏன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம் என நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது. எகிப்து அரசராக இருந்ததை போன்ற உணர்வு வந்தது. சிறுக சிறுக சேமித்த பணத்திலும், தந்தை மற்றும் தாய் சேர்த்து வைத்த பணத்திலும் தனது கனவு நினைவாகப் போவதை நினைத்துக் கொண்டே கண் அயர்ந்தார். நைல் நதி கரைபுரண்டோடியது. எகிப்துக்கு செல்ல ஆயத்தமாகி விமான நிலையம் வந்தபோது சாமிமுத்து சின்னச்சாமியை தனியே அழைத்தார்.
''நீ அவளை அங்கேயே தொலைச்சிட்டு வந்துரு, இதை சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டே இருந்தேன், இப்ப சொன்னாதான் உனக்கு மறக்கவே மறக்காது, என்ன புரியுதா''
''எகிப்துல தொலைக்கவா? இல்லைன்னா பெருல தொலைக்கவா?''
''நீ எந்த நாட்டில தொலைச்சாலும் பரவாயில்லை, ஆனா நீ அவளோட திரும்பி வீட்டுக்கு வந்தா உனக்கும் அவளுக்கும் இங்க இடமில்லை''
''நீங்க சொன்னதை அப்படியே நான் நினைவில வைச்சிக்கிறேன்''
''சமத்தான பையன், இங்க உனக்கு டாக்டர் பொண்ணு பாத்து வைச்சிருக்கோம்''
சின்னச்சாமி சிரித்துக்கொண்டே விமானநிலையத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார். அகிலாவிடம் விசயத்தை சொன்னார். அகிலா அரண்டு போனாள்.
''நீங்க திட்டம் போட்டுத்தான் கூப்பிட்டுட்டு போறீங்களா, நாம போக வேணாம்''
''உன்னை எதுக்கு நான் அப்படி தொலைக்கனும்''
''நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கனும்னு மாமா நினைக்கிறாரே''
''நல்ல யோசனைதான், ஆனா எதுக்கு வேற கல்யாணம்''
''நீங்கதான் திட்டம் போட்டீங்க, சொல்லுங்க''
சின்னச்சாமி அகிலாவிடம் சொல்லாமல் இருந்து இருக்கலாம் என நினைத்துக்கொண்டே விமானத்துக் கட்டுப்பாடுகளை முடிக்க கிளம்பினார். அகிலாவுக்குச் செல்ல மனமில்லாமல் போனது. சற்று குழப்பமாக இருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தார்.அகிலா அச்சத்துடன் காணப்பட்டாள். சின்னச்சாமி அகிலாவை கவனித்தார்.
''பயமா''
''ரொம்பவே''
''இறங்கிப் போ''
''தொலைஞ்சி போனு சொல்றீங்களா''
''அவ்வளவு ஈசியா தொலைச்சிருவேனா''
''மாமா ஏன் அப்படி சொன்னாரு''
''அது அவரோட விபரீத ஆசை''
''நாம காதலிச்சி கல்யாணம் பண்ணினது பிடிக்கலையா''
''அப்படின்னா எதுக்கு மூணு வருசம் காத்து இருக்கனும்''
''தொலைக்கமாட்டீங்கதானே''
சின்னச்சாமி சிரித்தார். அகிலா அமைதியானாள். விமானப் பயணம் இனிதாய் அமைந்தது. எகிப்து நாட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது வெயில் சுட்டெரித்தது. கண்ணுக்கு எட்டிய தொலைவில் பிரமிடுகள் வரவேற்றுக்கொண்டிருந்தன. நைல் நதியின் ஓரத்தில் பிரமாண்டமாக அமைந்திருந்த விடுதி ஒன்றில் இருவரும் நுழைந்தனர். சின்னச்சாமி சன்னல் வழியே நதியை பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார்.
''மனசுக்கு அமைதியா இருக்குங்க''
''எனக்கும் தான்''
''குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வெளியில போவோம்''
''தொலைச்சிர மாட்டீங்களே''
''இன்னுமா நினைச்சிட்டே இருக்க, இல்லை வசனம் பேசிப் பழகுறியா''
''டாக்டர் பொண்ணு எந்த ஊரு''
''இனி அந்த பேச்சை நீ எடுத்த நாம இந்த ரூமிலேயே இருப்போம், எங்கயும் போக வேணாம், சரியா''
''குளிச்சிட்டு வரேன்''
அகிலா குளியலறைக்குள் நுழைந்ததும் சின்னச்சாமி அறையை விட்டு வெளியேறினார்.
(தொடரும்)
''என்ன திடீருனு இந்த யோசனை''
''மாமா நம்மளை போக வேணாம்னு சொன்னாரே அதான் ஒரே யோசனையா இருந்தது''
''இராத்திரி நேரம் ஆனாலே பயம் வந்துருமே, என் அப்பாவுக்கு ஞாபக மறதி அதிகமாகிட்டே வருது அதான் அப்படி சொல்லிருக்கிறாரு, நீ தைரியமா தூங்கு, படத்தில வர மாதிரி எகிப்துக்கு கனவுல போய்ட்டு வந்துராத''
''உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான்''
அந்த இரவில் தங்களது அறையில் சின்னச்சாமியும் அகிலாவும் பேசிக்கொண்டார்கள். சிறிது நேரத்தில் அறை நிசப்தமானது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அதிகாலைப் பொழுதில் எழுந்த சின்னச்சாமி வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தார், வெள்ளம் போல் தண்ணீர் வீட்டினை சூழ்ந்து கொண்டிருந்தது. படகு ஒன்றை வாங்கி வைக்க வேண்டும் என வீட்டுத்தரகர் சொன்னது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. இரண்டு மணி நேரத்தில் பாதை சரியாகிவிடும் என்று மீண்டும் தனது அறைக்கு வந்து படுத்துக்கொண்டார்.
''என்னங்க எழுந்துச்சா''
''இல்லை இனிமேதான் தூங்கனும்''
''மணி எத்தனை''
''நாலு''
''பிளைட்டுக்கு நேரமாச்சா''
''அது நாளைக்கு, இப்போ நீ தூங்கு''
சின்னச்சாமி எகிப்து பற்றிய சிந்தனையில் இருந்தார். எகிப்து நாட்டிற்கு ஏன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம் என நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது. எகிப்து அரசராக இருந்ததை போன்ற உணர்வு வந்தது. சிறுக சிறுக சேமித்த பணத்திலும், தந்தை மற்றும் தாய் சேர்த்து வைத்த பணத்திலும் தனது கனவு நினைவாகப் போவதை நினைத்துக் கொண்டே கண் அயர்ந்தார். நைல் நதி கரைபுரண்டோடியது. எகிப்துக்கு செல்ல ஆயத்தமாகி விமான நிலையம் வந்தபோது சாமிமுத்து சின்னச்சாமியை தனியே அழைத்தார்.
''நீ அவளை அங்கேயே தொலைச்சிட்டு வந்துரு, இதை சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டே இருந்தேன், இப்ப சொன்னாதான் உனக்கு மறக்கவே மறக்காது, என்ன புரியுதா''
''எகிப்துல தொலைக்கவா? இல்லைன்னா பெருல தொலைக்கவா?''
''நீ எந்த நாட்டில தொலைச்சாலும் பரவாயில்லை, ஆனா நீ அவளோட திரும்பி வீட்டுக்கு வந்தா உனக்கும் அவளுக்கும் இங்க இடமில்லை''
''நீங்க சொன்னதை அப்படியே நான் நினைவில வைச்சிக்கிறேன்''
''சமத்தான பையன், இங்க உனக்கு டாக்டர் பொண்ணு பாத்து வைச்சிருக்கோம்''
சின்னச்சாமி சிரித்துக்கொண்டே விமானநிலையத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார். அகிலாவிடம் விசயத்தை சொன்னார். அகிலா அரண்டு போனாள்.
''நீங்க திட்டம் போட்டுத்தான் கூப்பிட்டுட்டு போறீங்களா, நாம போக வேணாம்''
''உன்னை எதுக்கு நான் அப்படி தொலைக்கனும்''
''நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கனும்னு மாமா நினைக்கிறாரே''
''நல்ல யோசனைதான், ஆனா எதுக்கு வேற கல்யாணம்''
''நீங்கதான் திட்டம் போட்டீங்க, சொல்லுங்க''
சின்னச்சாமி அகிலாவிடம் சொல்லாமல் இருந்து இருக்கலாம் என நினைத்துக்கொண்டே விமானத்துக் கட்டுப்பாடுகளை முடிக்க கிளம்பினார். அகிலாவுக்குச் செல்ல மனமில்லாமல் போனது. சற்று குழப்பமாக இருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தார்.அகிலா அச்சத்துடன் காணப்பட்டாள். சின்னச்சாமி அகிலாவை கவனித்தார்.
''பயமா''
''ரொம்பவே''
''இறங்கிப் போ''
''தொலைஞ்சி போனு சொல்றீங்களா''
''அவ்வளவு ஈசியா தொலைச்சிருவேனா''
''மாமா ஏன் அப்படி சொன்னாரு''
''அது அவரோட விபரீத ஆசை''
''நாம காதலிச்சி கல்யாணம் பண்ணினது பிடிக்கலையா''
''அப்படின்னா எதுக்கு மூணு வருசம் காத்து இருக்கனும்''
''தொலைக்கமாட்டீங்கதானே''
சின்னச்சாமி சிரித்தார். அகிலா அமைதியானாள். விமானப் பயணம் இனிதாய் அமைந்தது. எகிப்து நாட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது வெயில் சுட்டெரித்தது. கண்ணுக்கு எட்டிய தொலைவில் பிரமிடுகள் வரவேற்றுக்கொண்டிருந்தன. நைல் நதியின் ஓரத்தில் பிரமாண்டமாக அமைந்திருந்த விடுதி ஒன்றில் இருவரும் நுழைந்தனர். சின்னச்சாமி சன்னல் வழியே நதியை பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார்.
''மனசுக்கு அமைதியா இருக்குங்க''
''எனக்கும் தான்''
''குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வெளியில போவோம்''
''தொலைச்சிர மாட்டீங்களே''
''இன்னுமா நினைச்சிட்டே இருக்க, இல்லை வசனம் பேசிப் பழகுறியா''
''டாக்டர் பொண்ணு எந்த ஊரு''
''இனி அந்த பேச்சை நீ எடுத்த நாம இந்த ரூமிலேயே இருப்போம், எங்கயும் போக வேணாம், சரியா''
''குளிச்சிட்டு வரேன்''
அகிலா குளியலறைக்குள் நுழைந்ததும் சின்னச்சாமி அறையை விட்டு வெளியேறினார்.
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...