பரந்து விரிந்த வானத்திற்கு வெள்ளை மேகங்கள் வைத்த நீல வண்ண சேலையில் ஜரிகையாக மழை பொழிந்திட தயாராகிக்கொண்டிருந்தது. மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் திருநகரைத் தாண்டியதும் ஒரு சாலை வடக்குப் புறமாகச் செல்லும். அந்த சாலையின் வழியாக நடந்தால் சற்றுத் தொலைவில் ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கிறது. வீடு இருக்கும் இந்த நிலமானது முன்னர் விளைநிலமாக இருந்தது. இங்கே இந்த நிலம் வீட்டுமனைகளாக மாற முன்னேற்பாடுகள் எல்லாம் நடந்து முதன்முதலாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வீடும் வந்துவிட்டது. மற்ற இடங்களும் விற்பனையாவதில் கால தாமதம் ஏற்படுவதாக அறிந்து கொள்ள முடிந்தது.
அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் சின்னச்சாமி. வயது இருபத்தி ஆறு. அவரது மனைவி அகிலா. வயது இருபத்தி மூன்று. குழந்தை தற்போது வேண்டாம் என தற்காலிகமாக தள்ளிப்போட்டார்கள், வருடம் மூன்று உருண்டோடி விட்டது. சின்னச்சாமியுடன் அவரது தந்தை சாமிமுத்துவும், அன்னை தமிழ்மணியும், இளைய சகோதரி பூர்ணிமாவும், இளைய சகோதரர் சகாதேவனும் வசித்து வந்தார்கள்.
சின்னச்சாமி திருநகரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் புவியியல் பாடம் மற்றும் கணிதம் சொல்லித்தரும் ஆசிரியர். அவரது மனைவி அகிலா அதே பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியை. பூர்ணிமா மதுரையில் ஆயுர்வைசியா கல்லூரியில் இரண்டாம் வருட இயற்பியல் துறை படித்து வந்தார். சகாதேவன் தல்லாகுளத்தில் மின்சாரத் துறையில் சேர்ந்து சில மாதங்களே ஆகிறது. சாமிமுத்துவும் தமிழ்மணியும் திருநகரில் உள்ள சின்னச்சாமி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
தேன்நிலவுக்காக சென்ற வருடம் திட்டமிட்டபடி இந்த வருடம் கோடை கால விடுமுறையில் எகிப்து மற்றும் பெரு நாடுகளுக்குச் செல்ல தீர்மானித்தார் சின்னச்சாமி. அதற்கான ஏற்பாடுகளை அனைத்தையும் முறையாக செய்தார். அகிலா மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். மதுரையும், திருநெல்வேலியும், கன்னியாகுமரியும் மற்றும் சென்னையும் மட்டுமே சுற்றிப்பார்த்து இருந்த அகிலாவுக்கு எகிப்து என்றதும் மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. பிரமிடுகளின் பிரமிப்பை நேரில் காணும் ஆவல் அதிகமானது. பெரு நாட்டிற்குச் செல்வதில் அத்தனை விருப்பமில்லை, இருந்தாலும் தனது கணவருடன் தனியாய் இந்த விடுமுறையினை கழிக்கப் போவதில் மகிழ்ச்சியாக இருந்தது. சின்னச்சாமியும் எகிப்து மட்டும் பெரு செல்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார். சில வருடங்களாக எகிப்து நாட்டிற்கும் பெரு நாட்டிற்கும் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்தார்.
மழை விழ ஆரம்பித்தது. அனைவரும் வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து இருந்தார்கள். தொலைகாட்சி துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. சாமிமுத்து கேட்டார்.
''எப்போடா பிளைட்டு''
''நாளன்னைக்கு காலையில எட்டு மணிக்குப்பா''
''எல்லாம் எடுத்து வைச்சாச்சா''
''எடுத்து வைச்சாச்சுப்பா''
''எடுத்து வைச்சதெல்லாம் திருப்பி கீழ எடுத்து வைச்சிடுங்க, இப்போ போக வேண்டாம்''
''என்னப்பா திடீருன்னு இப்ப சொல்றீங்க''
''கொல்கத்தாவில நிலைமை சரியில்லை, அதனால நீ சொன்ன மாதிரி டிசம்பர்ல போகலாம்'''
'அப்பா, நாங்க போகப் போறது எகிப்து நாட்டுக்கு''
''மறந்துட்டேன்பா, நீ கொல்கத்தாவுக்குப் போகனும்னு சொன்னியே அதான் சொன்னேன்''
''அப்பா நான் சொன்னது பஞ்சாப்புக்கு, அங்கதான் இந்த டிசம்பர்ல போகனும்னு சொன்னேன்''
''வர வர எல்லாம் மறந்துட்டே வருதுடா''
''இனி உங்களுக்கு நீங்க வைத்தியம் பார்க்க வேண்டியதுதான்''
அனைவரும் சிரித்தார்கள் சாமிமுத்து உள்பட. ஒவ்வொருவரும் தனக்கு இதுதான் வேண்டும் என குறிப்பு எழுதிக் கொடுத்தார்கள். சந்தோசமாக வாங்கிக்கொண்டார் சின்னச்சாமி. அகிலாவுக்கு இரண்டுதின இரவுகள் இப்பொழுதே கழியாதா என்று இருந்தது. இவர்களின் இனிய வரவை நோக்கி எகிப்து உற்சாகமாகிக் கொண்டு இருந்தது.
(தொடரும்)
Saturday, 14 February 2009
Friday, 13 February 2009
தலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை
குரு பார்வையும், சனி பார்வையும் நமது ஜோதிட சாஸ்திரங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ராகு கேதுப் பெயர்ச்சிகளுக்குப் பெரும் முக்கியத்துவம் தராவிட்டாலும் சனிப்பெயர்ச்சிக்கும், குருப்பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருவது பலரும் அறிந்திருக்கக்கூடும் விசயமே. இதில் அறிவியலுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் ஒரு விசயம் கண்ணுக்குப் பட்டது. அவ்விசயத்திற்கு விரைவில் வருகிறேன்.
பூமிக்கு மற்ற கிரகங்களினால் பாதிப்பு உண்டு எனும் தம்பி முரளியின் பார்வை மிகவும் விசாலமானது. வாழ்த்துகள் தம்பி முரளி. பொதுவாக சூரியனின் கடுமையான கதிர்கள் நமது பூமியில் விழாத வண்ணம் வெள்ளி, புதன் கிரகங்கள் பாதுகாத்து வருவதும், பூமியானது தனது காந்த சக்தியால் அதுபோன்ற விசமிக்க கதிர்களை புறந்தள்ளிவிடும் தன்மையுடையது என நாம் அறிவோம்.
இதனைத் தாண்டி 1997ல் டொரான்டோவினைச் சேர்ந்த இரு இயற்பியல் விஞ்ஞானிகள் பூமியின் தட்பவெப்ப நிலையானது, பூமியின் வடிவத்துடன் சேர்ந்து பிற கிரகங்களின் அதுவும் முக்கியமாக ஈர்ப்புவிசையினால் சனியாலும், குருவாலும், பாதிக்கப்படுகிறது என சொல்லி இருக்கிறார்கள். இருவரும் நாங்கள் தான் இந்த விசயத்தை முதன் முதலாகச் சொல்கிறோம் என மார்தட்டிக் கொண்டார்கள். அதுவும் விசயம் வெளி வந்த இதழ் நேச்சர் எனும் இதழ். சாதாரணமாக எதையும் இந்த நேச்சர் இதழில் அத்தனை எளிதாக வெளியிடமாட்டார்கள். ஒவ்வொரு ஆராய்ச்சியாளனின் கனவும் இந்த இதழில் வெளியிடுவதுதான். இன்னும் அந்த நிலைக்கு எல்லாம் நான் போகவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விசயமாகத்தான் இருக்கிறது. ஒருநாளேனும் அந்த இதழில் நிச்சயம் வெளியிட்டுவிடலாம் என நம்பிக்கையும் இருக்கிறது.
பூமியின் சாய்வுத் தன்மையும் அது சுற்றி வரும் தன்மையும் பூமியில் தட்ப வெப்ப நிலை மாற காரணமாக இருக்கிறது. சாய்வுத் தன்மையானது 46000 வருடத்திற்கு ஒருமுறை மாறும் எனவும், சுற்றும் தன்மையானது 26000 வருடத்திற்கு ஒரு முறை மாறும் எனவும் கணித்து இருக்கிறார்கள். இப்படி மாறுவதால் சூரியனின் கதிர்கள் பூமியில் பட்டு மாற்றம் ஏற்படுகிறது என உறுதியாகச் சொல்கிறார்கள்.
20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியானது சனி மற்றும் குருவின் ஈர்ப்புத் தன்மை போலவே தனது ஈர்ப்புத் தன்மையை வைத்துக் கொண்டதால் சாய்வு தனமையும் வடிவமும் பெற்றதாக ஆராய்ச்சியில் நிரூபித்து இருக்கிறர்கள். அதன் விளைவாகவே 20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியில் சீதோஷ்ண நிலை மாறி இருக்கக் கூடும், எனவே இனி வரும் காலங்களிலும் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.
ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம்
பூமிக்கு மற்ற கிரகங்களினால் பாதிப்பு உண்டு எனும் தம்பி முரளியின் பார்வை மிகவும் விசாலமானது. வாழ்த்துகள் தம்பி முரளி. பொதுவாக சூரியனின் கடுமையான கதிர்கள் நமது பூமியில் விழாத வண்ணம் வெள்ளி, புதன் கிரகங்கள் பாதுகாத்து வருவதும், பூமியானது தனது காந்த சக்தியால் அதுபோன்ற விசமிக்க கதிர்களை புறந்தள்ளிவிடும் தன்மையுடையது என நாம் அறிவோம்.
இதனைத் தாண்டி 1997ல் டொரான்டோவினைச் சேர்ந்த இரு இயற்பியல் விஞ்ஞானிகள் பூமியின் தட்பவெப்ப நிலையானது, பூமியின் வடிவத்துடன் சேர்ந்து பிற கிரகங்களின் அதுவும் முக்கியமாக ஈர்ப்புவிசையினால் சனியாலும், குருவாலும், பாதிக்கப்படுகிறது என சொல்லி இருக்கிறார்கள். இருவரும் நாங்கள் தான் இந்த விசயத்தை முதன் முதலாகச் சொல்கிறோம் என மார்தட்டிக் கொண்டார்கள். அதுவும் விசயம் வெளி வந்த இதழ் நேச்சர் எனும் இதழ். சாதாரணமாக எதையும் இந்த நேச்சர் இதழில் அத்தனை எளிதாக வெளியிடமாட்டார்கள். ஒவ்வொரு ஆராய்ச்சியாளனின் கனவும் இந்த இதழில் வெளியிடுவதுதான். இன்னும் அந்த நிலைக்கு எல்லாம் நான் போகவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விசயமாகத்தான் இருக்கிறது. ஒருநாளேனும் அந்த இதழில் நிச்சயம் வெளியிட்டுவிடலாம் என நம்பிக்கையும் இருக்கிறது.
பூமியின் சாய்வுத் தன்மையும் அது சுற்றி வரும் தன்மையும் பூமியில் தட்ப வெப்ப நிலை மாற காரணமாக இருக்கிறது. சாய்வுத் தன்மையானது 46000 வருடத்திற்கு ஒருமுறை மாறும் எனவும், சுற்றும் தன்மையானது 26000 வருடத்திற்கு ஒரு முறை மாறும் எனவும் கணித்து இருக்கிறார்கள். இப்படி மாறுவதால் சூரியனின் கதிர்கள் பூமியில் பட்டு மாற்றம் ஏற்படுகிறது என உறுதியாகச் சொல்கிறார்கள்.
20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியானது சனி மற்றும் குருவின் ஈர்ப்புத் தன்மை போலவே தனது ஈர்ப்புத் தன்மையை வைத்துக் கொண்டதால் சாய்வு தனமையும் வடிவமும் பெற்றதாக ஆராய்ச்சியில் நிரூபித்து இருக்கிறர்கள். அதன் விளைவாகவே 20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியில் சீதோஷ்ண நிலை மாறி இருக்கக் கூடும், எனவே இனி வரும் காலங்களிலும் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.
ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம்
தலைவிதி தலைமதி - 8
ஒரு சின்ன மாநாடு. அங்கே ஒருவர் கேள்வி எழுப்பினார். புற்று நோய் என வந்துவிட்டால் அது எதனால் வருகிறது என்பதை அறிந்து அதற்குரிய சிகிச்சை முறை அளித்தால் ஒழிய எந்த ஒரு பிளாசிபோவும் ஒரு பலனும் அளித்துவிடாது. உடனே மற்றவர் சொன்னார், ஆமாம் ஆமாம் அப்படியே மருந்து அந்த நோயை முற்றிலும் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
பிளாசிபோவை நம்பி மட்டும் செயல்பட்டால் இன்று உலக மக்கள் தொகை மிகவும் குறைவாகவே இருந்து இருக்கும் என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். கருணை, புண்ணியம், அன்பு பிரார்த்தனை இதெல்லாம் காப்பாற்றும் என்று இருந்தால் ஏன் விலை கொடுத்து மருந்து வாங்க வேண்டும்! இந்த பிளாசிபோ கடுமையான ஒன்று என்கிறார்கள் அறிவியலாளர்கள். எனவே பிளாசிபோவினால் நோய் குண்மாகும் என்பதெல்லாம் நம்ப தகுந்தது அல்ல, உரிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
நமது திருவள்ளுவரும் அதைத்தானே அழகாக சொல்கிறார். நோய் நாடி... எனவே ஆன்மிகம் சொல்லும் மன அமைதியும், கட்டுப்பாடான வாழ்க்கையும் ஒரு பிளாசிபோ போன்று இருந்து மருந்தை சற்று தூர நிற்கச் செய்யும், ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. நோய் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அறிவியல் மருந்தை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய நோய்கள் என பல இருக்கிறது. ஒரு காலத்தில் நோய் கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனை என கருதிய புண்ணியவான்கள் இருந்தார்கள். ஆனால் கடவுள் அத்தனை சிரமம் எல்லாம் தருவதில்லை என நோய் வருவதற்கான காரணத்தை கண்டுபிடித்து எது நோய் உருவாக்கியதோ அதை வைத்தே மருந்து கண்டுபிடித்த அறிவியல் மேதைகளும் இருக்கிறார்கள்.
உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த பென்சிலின், முக்கியமாக எனக்குப் பிடித்துப் போன பென்சிலின். தடுப்பு ஊசி முறையெல்லாம் 'முள்ளை முள்ளால் எடுப்பது' போன்றதுதான். ஆக ஆன்மிகம் நம்மை நல்வழிபடுத்த, நம்மை நாம் உணர்ந்து கொள்ள சொல்லும் வழிமுறை. அறிவியல் எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்து தீர்த்திட வழி பார்க்கும் ஒரு வழிமுறை. பிளாசிபோவோ, மருந்தோ 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதால் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், அத்துடன் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிளாசிபோ, மருந்து போன்று விற்பனைக்கு கிடைப்பதில்லை! ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நோய் தீர்க்கிறேன் என வித்தை காட்டும் மனிதர்கள் பிளாசிபோ வகையைச் சார்ந்தவர்களே. நமது மூதாதையர்களின் மருத்துவம் பிளாசிபோ வகையைச் சார்ந்தது அல்ல, ஆனால் அனைத்தையும் முறைப்படுத்துங்கள் என மேல்நாட்டு மருத்துவம் கேட்டுக்கொள்கிறது. நமக்கு அதற்கு எங்கே நேரம்? ஒரு திப்பிலி, சுக்கு, மிளகு, இஞ்சி போய்க்கொண்டே இருப்போம்!
மாத்திரை என்பது நமது உடலில் உயிர் வேதி மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். அதாவது நமது உடலில் உயிர்வேதிவினைகள் பல மூலக்கூறுகளால் வழிநடத்தப்படுகிறது. அவ்வாறு நடக்கும் வினைகள் நமது உடலுக்கு நல்ல செயலை செய்ய வேண்டும், அப்படியில்லாது ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது இந்த மாத்திரைகள் நமது உடலில் இருந்த முதன்மை நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன.
நமது மூளை நமது உடலில் அனைத்தும் சீராக இருக்கும் வண்ணம் பல தொழிலாளர்களை வேலைக்கு அமைத்து உள்ளது, ஏதாவது பிரச்சினையெனில் இயற்கையாகவே முதல் நிலைக்கு கொண்டு செல்லப்படும், அப்படி இல்லாதபட்சத்தில் தான் இந்த மாத்திரை உதவுகிறது. அதுதான் உடம்புக்கும் மாத்திரைக்கும் உள்ள சம்பந்தம்.
இது ஒன்றும் தற்காலிகமாக நடந்தது அல்ல. பல வருடங்கள் முன்னரே மருத்துவ ரீதியாக உணரப்பட்ட ஒன்று. ஒரு ஆராய்ச்சியாளர் ஆற்றில் தண்ணீரை குடித்ததும் காய்ச்சல் வந்துவிட்டதை போன்று உணர்ந்தார். ஆனால் அந்த தண்ணீரை அதிகமாக அருந்த அருந்த காய்ச்சல் மறைந்து போனதை கண்டார். அப்படி உருவானதுதான் மலேரியாவுக்கான மாத்திரை. நமது ஆயுர்வேத மருந்தும் அதுவே.
நோய் என்பது நமது உடல்நிலை சமன்நிலை அற்று போவதாகும். நமது உடலில் பலவித வழிப்பாதைகள் இருக்கின்றன, அனைத்தும் சரியாக செயல்பட்டாலன்றி ஏதாவது பிரச்சினை வரக்கூடும், அப்படி சில வழிபாதைகளில் ஏற்படும் கோளாறுகளால் வரும் நோய் வழி அறிந்து தரப்படும் மாத்திரை அந்த வழிப்பாதையை சீராக்குகிறது. நோய் அப்படித்தான் குணமாகிறது. இது குறித்து பெருமளவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது, புது புது வியாதிகள் வந்து கொண்டு இருக்கிறது, மாத்திரையும் தான்!
நமது உடம்பு கார்பன் போன்ற தனிமம் சேர்ந்த மூலக்கூறுகளால் ஆனதே. எரித்தால் தெரியும், புதைத்தால் புரியும். எனவே தனிமத்திற்கும் உடலுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. எப்படி இத்தனை சிக்கலான வழியமைப்பை ஏற்படுத்திக் கொண்டது என வரும்போதுதான் ''அறிவிற்சிறந்த ஒருவர் உருவாக்கினார்'' எனும் கொள்கை பிறக்கிறது. நமது உடல் செயற்கை அல்லவே! எல்லாம் இயற்கை தான். இயற்கை தான் செயற்கையாக தோற்றம் அளிக்கின்றதேயன்றி கீதாசாரம் சொன்னது போல எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது! மாற்று விசயங்கள் என வரும்போது எல்லாம் செயற்கைத்தனமாக இருக்கிறது அவ்வளவே. ஆம் இயற்கையாய் மட்டுமல்ல அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான்.
பறப்பது என்பது மனிதனுக்கு சாத்தியமில்லை என பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே மனிதன் தனது அறிவினைக்கொண்டு பறந்து செல்ல விமானம் தயாரித்துவிட்டான். இறக்கைகள் உள்ள பறவையெல்லாம் பறப்பதில்லை. இறக்கைக்கு கீழே இருக்கும் சிறகுகள்/இறகுகள் தான் பறப்பதற்கு காரணம். ஒரு பட்டம் பறந்தது, வியந்தான் மனிதன். பறவை பறந்தது, வியந்தான். தானும் பறக்க கைகளில் சிலவற்றைக் கட்டியும் பார்த்தான். எலும்பு உடைந்ததுதான் மிச்சம். மனிதன் நடப்பதற்கேற்ற உடலமைப்பு கொண்டவன் என நிரூபணம் ஆனது. பலூனில் காற்றை அடைத்து அதைப் பறக்கச் செய்தான். தனது காற்றை ஊதி பலூன் பறப்பது கண்டு தனக்குள் இருக்கும் காற்று தன்னை மிதக்கச் செய்யாதா எனும் ஏக்கம் இன்று வரை தீரவில்லை. பலூனில் ஹீலியம் வாயு அடைத்து அதில் தன்னை இணைத்து பறந்தான். ஹைட்ரஜன் மூலம் உருவாக்கப்பட்ட விமானம் எரிந்து வீழ்ந்தது. இப்படி ஒன்றில் தொடர்பு கொண்டுதான் அவனால் பறக்க முடிகிறது என்பது மனிதனால் செய்யக்கூடிய விசயம். ஒல்லியாக இருப்பவரை ஊதித் தள்ளிவிடுவேன் எனச் சொல்வது நகைச்சுவையாக இருக்கும், காற்றடித்தால் பறந்துவிடுவாய் என்பதும் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் மனிதனால் பறப்பது என்பது சற்று கடினமே.
சித்தர்கள்... அதிசய மனிதர்கள். இப்படி இயற்கையாய் சாத்தியமில்லை எனச் சொன்னால் அது உங்கள் இயலாமையின் காரணம் என சொல்லும் மனிதர்கள். கூடுவிட்டு கூடு பாய்வது, காற்றோடு காற்றாய் இருப்பது, தண்ணீரில் நடப்பது என்பதெல்லாம் இதுவரை பார்த்தது இல்லை. செய்தி கேள்விபட்டதுதான். அதே வேளையில் பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பலர் பல நாட்களாக உயிருடன் இருந்து இருக்கிறார்கள் எனும் செய்தி கேட்கும்போது அந்த அழிவின் காரணமாக மனம் வலித்தாலும் ஆச்சரியம் அளிக்கின்றது.
காற்றில் 78% நைட்ரஜன், 21% ஆக்ஸிஜன் 1% ஆர்கன், கிரிப்டான், செனான் கார்பன்- டை- ஆக்ஸைடு (0.04%) ஹைட்ரஜன் மட்டுமே. இதில் இலகுவான காற்றை உள்ளிழுத்து சித்தர்கள் பறக்கிறார்களா? அல்லது மனம் இலேசாக இருப்பதால் பறந்தது போல் உணர்கிறார்களா? அறிவதற்கில்லை.
போகர் ஆச்சரியம் அளிக்கின்றார். திருமூலர் ஆச்சரியம் அளிக்கின்றார். கலசமுனி வியக்க வைக்கின்றார். ஒருநாளேனும் ஒரு சித்தரையாவதுப் பார்த்து உண்மை தெரிந்து கொள்ளக்கூடாதா என்றுதான் எனக்கு இருக்கின்றது. உடல் செலுத்துவது என்பது யோசிக்க வேண்டிய விசயம். இரத்தம் ஒரே வகுப்பும் காரணியும் இல்லையென்றால் உயிர் மிஞ்சாது. இன்ன இன்ன இரத்த வகுப்புதான் இன்ன இன்ன இரத்த வகுப்புக்கு என எழுதி வைக்கப்பட்ட விதி இருக்கிறது. அதே வேளையில் உறுப்பு மாற்று சிகிச்சை சாத்தியமே என்கிறது அறிவியல்.
எனது எண்ணத்தை உங்களிடம் திணித்து என்னைப் போலவே உங்களை 100% சதவிகிதம் மாற்ற முடியாவிட்டாலும் ஓரளவு மாற்ற இயலும் என்கிறது மனோதத்துவ முறை. எனவே தனிமங்கள் மூலம் சாதிப்பது என்பது சற்று யோசிக்க வேண்டியதே. கார்பன் மோனாக்ஸைடு ரத்தத்தில் அதிக அளவில் கலந்தால் உயிர் போய்விடும். நைட்ரஜன் இரத்தத்தில் கலந்துவிட தொடங்கினால் உயிர் வலி எடுக்கும். கடலுக்கு அடியில் செல்லும் மனிதர்களுக்கு இந்த நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
சித்தர்கள் வாழ்க்கை முறை சாமான்யனான எனக்கு தெரிய வாய்ப்பு இதுவரை இல்லை. கோமெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அமினோஅமிலங்கள் இருக்கிறது. ஆனால் அங்கு உயிரினங்கள் இல்லை. இங்கு இருப்பதோ இருபதே இருபது அமினோஅமிலங்கள். அதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் சிந்தனைகள் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பது ஆச்சரியமே. எப்படியெல்லாம் உயிரினங்கள் புரதம்தனை உருவாக்கிக் கொள்கின்றன என்பது அதிசயமே.
அதாவது நமக்கு பிரச்சினை எல்லாம் சூரியன் தான். பக்கத்தில் இருக்கும் கோள்கள் நமக்கு நன்மை பயக்கும் வகையில் தான் இருக்கின்றன என்பது எனக்குத் தெரிந்தவரை. நமது வாயு மண்டலம் பற்றி விரிவாக பார்த்தால் தெரியும். பிற கிரகங்களில் இருந்து வாயுக்கள் நமது பூமியில் நுழைகிறதா என்பது பற்றி தெரிந்து கொண்டு எழுதுகிறேன். தாவர இனங்கள் அனைத்து மூலக்கூறுகளையும் வைத்திருக்கிறது. பாம்பின் விஷம் கூட நோய்க்கு மருந்து. கொல்லப்பட்ட பாக்டீரியா, வைரஸ், விஷம் நீக்கப்பட்ட பாக்டீரியா, வைரஸ் மருந்து. எனவே விண்வெளியில் சென்று இங்கிருப்பதையே எடுத்துச் செய்வது என்பது இந்தியாவில் குக்கிராமத்தில் இருந்து காய்ச்சலுக்கு இலண்டனுக்கு வந்து ஊசிகூட போடாமல் மருந்து வாங்கிச் சாப்பிடுவது போன்றதே. இலண்டனிலாவது மருந்து கிடைக்கும் எனத் தெரிந்து வரலாம். ஆனால் விண்வெளியில் எங்கு என்ன இருக்கிறது எனப் பார்த்தால் எல்லாம் வெறுமையாக இருக்கிறது.
பிளாசிபோவை நம்பி மட்டும் செயல்பட்டால் இன்று உலக மக்கள் தொகை மிகவும் குறைவாகவே இருந்து இருக்கும் என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். கருணை, புண்ணியம், அன்பு பிரார்த்தனை இதெல்லாம் காப்பாற்றும் என்று இருந்தால் ஏன் விலை கொடுத்து மருந்து வாங்க வேண்டும்! இந்த பிளாசிபோ கடுமையான ஒன்று என்கிறார்கள் அறிவியலாளர்கள். எனவே பிளாசிபோவினால் நோய் குண்மாகும் என்பதெல்லாம் நம்ப தகுந்தது அல்ல, உரிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
நமது திருவள்ளுவரும் அதைத்தானே அழகாக சொல்கிறார். நோய் நாடி... எனவே ஆன்மிகம் சொல்லும் மன அமைதியும், கட்டுப்பாடான வாழ்க்கையும் ஒரு பிளாசிபோ போன்று இருந்து மருந்தை சற்று தூர நிற்கச் செய்யும், ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. நோய் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அறிவியல் மருந்தை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய நோய்கள் என பல இருக்கிறது. ஒரு காலத்தில் நோய் கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனை என கருதிய புண்ணியவான்கள் இருந்தார்கள். ஆனால் கடவுள் அத்தனை சிரமம் எல்லாம் தருவதில்லை என நோய் வருவதற்கான காரணத்தை கண்டுபிடித்து எது நோய் உருவாக்கியதோ அதை வைத்தே மருந்து கண்டுபிடித்த அறிவியல் மேதைகளும் இருக்கிறார்கள்.
உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த பென்சிலின், முக்கியமாக எனக்குப் பிடித்துப் போன பென்சிலின். தடுப்பு ஊசி முறையெல்லாம் 'முள்ளை முள்ளால் எடுப்பது' போன்றதுதான். ஆக ஆன்மிகம் நம்மை நல்வழிபடுத்த, நம்மை நாம் உணர்ந்து கொள்ள சொல்லும் வழிமுறை. அறிவியல் எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்து தீர்த்திட வழி பார்க்கும் ஒரு வழிமுறை. பிளாசிபோவோ, மருந்தோ 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதால் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், அத்துடன் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிளாசிபோ, மருந்து போன்று விற்பனைக்கு கிடைப்பதில்லை! ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நோய் தீர்க்கிறேன் என வித்தை காட்டும் மனிதர்கள் பிளாசிபோ வகையைச் சார்ந்தவர்களே. நமது மூதாதையர்களின் மருத்துவம் பிளாசிபோ வகையைச் சார்ந்தது அல்ல, ஆனால் அனைத்தையும் முறைப்படுத்துங்கள் என மேல்நாட்டு மருத்துவம் கேட்டுக்கொள்கிறது. நமக்கு அதற்கு எங்கே நேரம்? ஒரு திப்பிலி, சுக்கு, மிளகு, இஞ்சி போய்க்கொண்டே இருப்போம்!
மாத்திரை என்பது நமது உடலில் உயிர் வேதி மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். அதாவது நமது உடலில் உயிர்வேதிவினைகள் பல மூலக்கூறுகளால் வழிநடத்தப்படுகிறது. அவ்வாறு நடக்கும் வினைகள் நமது உடலுக்கு நல்ல செயலை செய்ய வேண்டும், அப்படியில்லாது ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது இந்த மாத்திரைகள் நமது உடலில் இருந்த முதன்மை நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன.
நமது மூளை நமது உடலில் அனைத்தும் சீராக இருக்கும் வண்ணம் பல தொழிலாளர்களை வேலைக்கு அமைத்து உள்ளது, ஏதாவது பிரச்சினையெனில் இயற்கையாகவே முதல் நிலைக்கு கொண்டு செல்லப்படும், அப்படி இல்லாதபட்சத்தில் தான் இந்த மாத்திரை உதவுகிறது. அதுதான் உடம்புக்கும் மாத்திரைக்கும் உள்ள சம்பந்தம்.
இது ஒன்றும் தற்காலிகமாக நடந்தது அல்ல. பல வருடங்கள் முன்னரே மருத்துவ ரீதியாக உணரப்பட்ட ஒன்று. ஒரு ஆராய்ச்சியாளர் ஆற்றில் தண்ணீரை குடித்ததும் காய்ச்சல் வந்துவிட்டதை போன்று உணர்ந்தார். ஆனால் அந்த தண்ணீரை அதிகமாக அருந்த அருந்த காய்ச்சல் மறைந்து போனதை கண்டார். அப்படி உருவானதுதான் மலேரியாவுக்கான மாத்திரை. நமது ஆயுர்வேத மருந்தும் அதுவே.
நோய் என்பது நமது உடல்நிலை சமன்நிலை அற்று போவதாகும். நமது உடலில் பலவித வழிப்பாதைகள் இருக்கின்றன, அனைத்தும் சரியாக செயல்பட்டாலன்றி ஏதாவது பிரச்சினை வரக்கூடும், அப்படி சில வழிபாதைகளில் ஏற்படும் கோளாறுகளால் வரும் நோய் வழி அறிந்து தரப்படும் மாத்திரை அந்த வழிப்பாதையை சீராக்குகிறது. நோய் அப்படித்தான் குணமாகிறது. இது குறித்து பெருமளவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது, புது புது வியாதிகள் வந்து கொண்டு இருக்கிறது, மாத்திரையும் தான்!
நமது உடம்பு கார்பன் போன்ற தனிமம் சேர்ந்த மூலக்கூறுகளால் ஆனதே. எரித்தால் தெரியும், புதைத்தால் புரியும். எனவே தனிமத்திற்கும் உடலுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. எப்படி இத்தனை சிக்கலான வழியமைப்பை ஏற்படுத்திக் கொண்டது என வரும்போதுதான் ''அறிவிற்சிறந்த ஒருவர் உருவாக்கினார்'' எனும் கொள்கை பிறக்கிறது. நமது உடல் செயற்கை அல்லவே! எல்லாம் இயற்கை தான். இயற்கை தான் செயற்கையாக தோற்றம் அளிக்கின்றதேயன்றி கீதாசாரம் சொன்னது போல எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது! மாற்று விசயங்கள் என வரும்போது எல்லாம் செயற்கைத்தனமாக இருக்கிறது அவ்வளவே. ஆம் இயற்கையாய் மட்டுமல்ல அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான்.
பறப்பது என்பது மனிதனுக்கு சாத்தியமில்லை என பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே மனிதன் தனது அறிவினைக்கொண்டு பறந்து செல்ல விமானம் தயாரித்துவிட்டான். இறக்கைகள் உள்ள பறவையெல்லாம் பறப்பதில்லை. இறக்கைக்கு கீழே இருக்கும் சிறகுகள்/இறகுகள் தான் பறப்பதற்கு காரணம். ஒரு பட்டம் பறந்தது, வியந்தான் மனிதன். பறவை பறந்தது, வியந்தான். தானும் பறக்க கைகளில் சிலவற்றைக் கட்டியும் பார்த்தான். எலும்பு உடைந்ததுதான் மிச்சம். மனிதன் நடப்பதற்கேற்ற உடலமைப்பு கொண்டவன் என நிரூபணம் ஆனது. பலூனில் காற்றை அடைத்து அதைப் பறக்கச் செய்தான். தனது காற்றை ஊதி பலூன் பறப்பது கண்டு தனக்குள் இருக்கும் காற்று தன்னை மிதக்கச் செய்யாதா எனும் ஏக்கம் இன்று வரை தீரவில்லை. பலூனில் ஹீலியம் வாயு அடைத்து அதில் தன்னை இணைத்து பறந்தான். ஹைட்ரஜன் மூலம் உருவாக்கப்பட்ட விமானம் எரிந்து வீழ்ந்தது. இப்படி ஒன்றில் தொடர்பு கொண்டுதான் அவனால் பறக்க முடிகிறது என்பது மனிதனால் செய்யக்கூடிய விசயம். ஒல்லியாக இருப்பவரை ஊதித் தள்ளிவிடுவேன் எனச் சொல்வது நகைச்சுவையாக இருக்கும், காற்றடித்தால் பறந்துவிடுவாய் என்பதும் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் மனிதனால் பறப்பது என்பது சற்று கடினமே.
சித்தர்கள்... அதிசய மனிதர்கள். இப்படி இயற்கையாய் சாத்தியமில்லை எனச் சொன்னால் அது உங்கள் இயலாமையின் காரணம் என சொல்லும் மனிதர்கள். கூடுவிட்டு கூடு பாய்வது, காற்றோடு காற்றாய் இருப்பது, தண்ணீரில் நடப்பது என்பதெல்லாம் இதுவரை பார்த்தது இல்லை. செய்தி கேள்விபட்டதுதான். அதே வேளையில் பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பலர் பல நாட்களாக உயிருடன் இருந்து இருக்கிறார்கள் எனும் செய்தி கேட்கும்போது அந்த அழிவின் காரணமாக மனம் வலித்தாலும் ஆச்சரியம் அளிக்கின்றது.
காற்றில் 78% நைட்ரஜன், 21% ஆக்ஸிஜன் 1% ஆர்கன், கிரிப்டான், செனான் கார்பன்- டை- ஆக்ஸைடு (0.04%) ஹைட்ரஜன் மட்டுமே. இதில் இலகுவான காற்றை உள்ளிழுத்து சித்தர்கள் பறக்கிறார்களா? அல்லது மனம் இலேசாக இருப்பதால் பறந்தது போல் உணர்கிறார்களா? அறிவதற்கில்லை.
போகர் ஆச்சரியம் அளிக்கின்றார். திருமூலர் ஆச்சரியம் அளிக்கின்றார். கலசமுனி வியக்க வைக்கின்றார். ஒருநாளேனும் ஒரு சித்தரையாவதுப் பார்த்து உண்மை தெரிந்து கொள்ளக்கூடாதா என்றுதான் எனக்கு இருக்கின்றது. உடல் செலுத்துவது என்பது யோசிக்க வேண்டிய விசயம். இரத்தம் ஒரே வகுப்பும் காரணியும் இல்லையென்றால் உயிர் மிஞ்சாது. இன்ன இன்ன இரத்த வகுப்புதான் இன்ன இன்ன இரத்த வகுப்புக்கு என எழுதி வைக்கப்பட்ட விதி இருக்கிறது. அதே வேளையில் உறுப்பு மாற்று சிகிச்சை சாத்தியமே என்கிறது அறிவியல்.
எனது எண்ணத்தை உங்களிடம் திணித்து என்னைப் போலவே உங்களை 100% சதவிகிதம் மாற்ற முடியாவிட்டாலும் ஓரளவு மாற்ற இயலும் என்கிறது மனோதத்துவ முறை. எனவே தனிமங்கள் மூலம் சாதிப்பது என்பது சற்று யோசிக்க வேண்டியதே. கார்பன் மோனாக்ஸைடு ரத்தத்தில் அதிக அளவில் கலந்தால் உயிர் போய்விடும். நைட்ரஜன் இரத்தத்தில் கலந்துவிட தொடங்கினால் உயிர் வலி எடுக்கும். கடலுக்கு அடியில் செல்லும் மனிதர்களுக்கு இந்த நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
சித்தர்கள் வாழ்க்கை முறை சாமான்யனான எனக்கு தெரிய வாய்ப்பு இதுவரை இல்லை. கோமெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அமினோஅமிலங்கள் இருக்கிறது. ஆனால் அங்கு உயிரினங்கள் இல்லை. இங்கு இருப்பதோ இருபதே இருபது அமினோஅமிலங்கள். அதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் சிந்தனைகள் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பது ஆச்சரியமே. எப்படியெல்லாம் உயிரினங்கள் புரதம்தனை உருவாக்கிக் கொள்கின்றன என்பது அதிசயமே.
அதாவது நமக்கு பிரச்சினை எல்லாம் சூரியன் தான். பக்கத்தில் இருக்கும் கோள்கள் நமக்கு நன்மை பயக்கும் வகையில் தான் இருக்கின்றன என்பது எனக்குத் தெரிந்தவரை. நமது வாயு மண்டலம் பற்றி விரிவாக பார்த்தால் தெரியும். பிற கிரகங்களில் இருந்து வாயுக்கள் நமது பூமியில் நுழைகிறதா என்பது பற்றி தெரிந்து கொண்டு எழுதுகிறேன். தாவர இனங்கள் அனைத்து மூலக்கூறுகளையும் வைத்திருக்கிறது. பாம்பின் விஷம் கூட நோய்க்கு மருந்து. கொல்லப்பட்ட பாக்டீரியா, வைரஸ், விஷம் நீக்கப்பட்ட பாக்டீரியா, வைரஸ் மருந்து. எனவே விண்வெளியில் சென்று இங்கிருப்பதையே எடுத்துச் செய்வது என்பது இந்தியாவில் குக்கிராமத்தில் இருந்து காய்ச்சலுக்கு இலண்டனுக்கு வந்து ஊசிகூட போடாமல் மருந்து வாங்கிச் சாப்பிடுவது போன்றதே. இலண்டனிலாவது மருந்து கிடைக்கும் எனத் தெரிந்து வரலாம். ஆனால் விண்வெளியில் எங்கு என்ன இருக்கிறது எனப் பார்த்தால் எல்லாம் வெறுமையாக இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...