தண்ணீர் சிகிச்சை முறை கூட ஒருவகை பிளாசிபோ தான். ஆனால் தற்போதைய ஆய்வின் படி ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும் என்பதால் வெறும் கற்பனை என தெரியவந்துள்ளது.
இந்த பிளாசிபோவுக்கு எனது ஆய்வுக்கூடத்தில் நடந்த ஒரு சின்ன உதாரணம். இருமலைக் கட்டுப்படுத்த ஒரு மூலக்கூறுதனை கண்டுபிடித்து இருக்கிறோம். அந்த மூலக்கூறு உண்மையிலே சிறந்ததா என கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறோம். இதனை மேலும் உறுதிபடுத்த குவைத் நாட்டில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு என்னைச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். நானும் சரி என சொன்னேன். அந்த ஆய்வகமானது இங்கு பயின்ற மாணவரால் நடத்தப்பட்டு வருகிறது. சில வாரங்கள் முன்னர் என்னிடம் அந்த ஆசிரியர் வந்து குவைத் ஆய்வகத்திற்கு தண்ணீர் மட்டும் அனுப்பி மருந்து என சொல்லி இருப்பதாகவும் வரும் முடிவு பொறுத்தே நாம் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டும் என கூறிவிட்டார். என்னால் சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. நான் சிரித்ததும் அவரும் சிரித்துவிட்டார். இதுதான் பிளாசிபோ!
சிரிப்பாக எனக்குத்தான் இருக்கும் ஆனால் பீச்சர் எனும் ஆய்வாளருக்கு அப்படியில்லை. பீச்சர் 15 வித வித நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை கையில் எடுத்தார். அந்த 15 ஆராய்ச்சிகளை ஆராய்ந்தவர் இந்த பிளாசிபோ மூலம் 35 சதவிகிதம் தேர்ச்சி அடைந்தார்கள் என தனது ஆய்வுக்கட்டுரையில் எழுதினார். ஆனால் அதற்குப் பின்னால் நடந்த ஆராய்ச்சிகளை ஆராய்ந்தபோது பீச்சர் சொன்னதைவிட பிளாசிபோ சற்று அதிகமாகவே நோயினை தீர்த்து இருப்பதாக தெரியவந்தது. இந்த பிளாசிபோவுக்கு நோய் தீர்க்கும் ஆற்றலுண்டு என மின்னல் வேகத்தில் பல ஆராய்ச்சிகளை ஆராய ஆரம்பித்த பெருமை பீச்சர் எனும் ஆய்வாளருக்குத்தான் சேரும்.
வலி, மனநிலை பாதிப்பு போன்ற நோய்களில் 60 சதவிகிதம் பிளாசிபோவால் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள் எனவும், மனநிலை நோயாளிகளில் மருந்துக்கும், பிளாசிபோவுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
ஆராய்ச்சியில் எதையுமே சரி என அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், 1997 ல் கீய்ன்லே மற்றும் கீய்ன் பீச்சர் கூறிய அனைத்து ஆராய்ச்சியையும் திரும்பவும் சரிபார்த்து பீச்சர் சொன்னது அப்பட்டமான பொய் என காட்டினார்கள். பிளாசிபோவுக்கு இங்கே என்ன வேலை என கூறி ஒரு நோயில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு வேறு சில காரணிகளும் உண்டு, அதனை கருத்தில் கொள்ளவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
பாவ்செல் எனும் ஆய்வாளர் சொன்ன வாசகம் மிகவும் யோசிக்க வேண்டியது. பொதுவாக ஒரு நோய் தானாக, இயற்கையாக மாற்றம் கொள்ளக்கூடியது மருந்து உட்கொண்டாலும் சரி, உட்கொள்ளாவிட்டாலும் சரி, எனவே அதைக் கருத்தில் கொள்ள வேண்டும் அதை விடுத்து பிளாசிபோ நோய் தீர்க்கும் என சொல்வது விந்தையானது என கடந்த வருடம் அறிவித்து உள்ளார்.
ஒரு ஆராய்ச்சியில் பிளாசிபோவால் முன்னேற்றம் என சொன்னபோது அதுகுறித்து மற்ற ஆராய்ச்சியாளர் சொன்னது இந்த முடிவுகள் எதைத் தெரிவிக்கின்றது எனில் ஒன்று செய்முறையில் குளறுபடி இருக்க வேண்டும் அல்லது முடிவுகளை கண்மூடி எழுதி இருக்க வேண்டும். இப்படி பிளாசிபோ முன்னேற்றம் தந்ததாக கூறும் ஆய்வுகள் ஒருபக்கமும், அது கண்கட்டு விளையாட்டு என மறுபக்கமும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.
பிளாசிபோ என்பது மருந்து மற்றும் சிகிச்சை முறை அற்றது என அர்த்தப்படும். ஒரு ரத்தநாளம் உடைகிறது எனில் அதை நாம் கட்டி நிறுத்தினால் அது சிகிச்சை முறை. ஆனால் அதே ரத்தநாளத்தை கட்டுவது போல் கட்டி ஆனால் கட்டாமல் விட்டுவிட்டு என்ன ஆகிறது எனப் பார்ப்பது பிளாசிபோ.
பாரசிட்டமாலை தண்ணீரில் கலந்து கொடுத்தால் அது மருந்து. அது உடலில் என்ன செய்கிறது எனப் பார்ப்பது மருந்தினால் என்ன விளைவு.
பிளாசிபோ என்றால் வெறும் தண்ணீரை மருந்து கலக்காமல் தருவது. பல சிகிச்சை முறைகள் குறிப்பாக பிரார்த்தனை கூட பிளாசிபோ வகையில் சாரும்.
மருந்து ஒன்றைத் தராமல், நோய் தீர்க்கும் மருந்து தந்திருக்கிறேன், சரியாகிவிடும் என மனதில் நம்பிக்கையை விதைக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் நோயாளியும் மருந்து உட்கொள்வதால் நோய் குணமாகிவிட வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்கிறார்கள்.
நமக்கு என்ன நடக்கப்போகிறது எனும் நம்பிக்கையே நோய் தீர்க்கும் மருந்து என்கிறார் கிர்ஸ்ச். இவர் பல ஆராய்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தபின்னர் சொன்ன முடிவு இது. ஒரு மனிதனின் நம்பிக்கை நமது உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தவல்லவை எனவும் மனிதனின் எண்ணம் நரம்பியல் மற்றும் உயிர்வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையே என்கிறார்கள்.
இதைத்தானே ஆன்மிகமும் சொல்கிறது, அப்படியெனில் ஆன்மிகமும் அறிவியலும் வேறு என எப்படி சொல்லலாம் என்றால் அறிவியல் விளக்கம் சொல்லப்பார்க்கிறது, ஆன்மிகம் விளக்கம் தேவையில்லை என்கிறது அதனால்தான் இரண்டும் வெவ்வேறு. இந்த மனநிலைதான் பிளாசிபோ ஏற்படுத்தும் முன்னேற்றத்திற்கான காரணம் என நம்பப்படுகிறது. ஒருவரிடம் பிளாசிபோவை தந்து அதிக சக்தி வாய்ந்த மருந்தை தந்திருக்கிறேன் என சொல்லி அவரது நோய் குணமான பின்னர் அவரிடம் நான் தந்தது பிளாசிபோ என சொன்னால் அவர் எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்று நினைக்கக்கூடும் அல்லவா! ஆனால் இந்த மனநிலைதான் ஒட்டுமொத்த காரணம் என சொல்லிவிடமுடியாது என்கிறார்கள் பலர்.
நமது எண்ணம் நமது உடலில் ஓடும் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வேண்டும் என்கிறார்கள். சரிதான்! இதுமட்டுமல்ல காரணம், அன்பு, கருணை, உற்சாகம் போன்ற காரணிகள் அவசியம் என்கிறார்கள். இதைத்தானே ஒரு திரைப்படத்தின் மூலம் சொல்ல வந்தார்கள்.
Friday, 13 February 2009
தலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்
பிளாசிபோ (placebo) வினை என்பது மருந்து மற்றும் பிற சிகிச்சை முறைகள் இல்லாமல், உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை அளவிடக்கூடியது, பார்க்கக்கூடியது ஆகும். உதாரணத்திற்கு ஜலதோசத்தை குறிப்பிடலாம். மருந்து எடுத்துக்கொண்டாலும் சரி, எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சரி, ஏழு நாட்களில் ஜலதோசம் குணமாகிவிடும் என சொல்வார்கள். ஒரு மருத்துவரை அவர் கைராசிக்காரர் என பலர் தங்களுக்கென ஒரு மருத்துவரைக் குறிப்பிடுவதை நாம் அறியலாம். எனக்கு இந்த அனுபவம் உண்டு.
எனது தந்தையுடன் சிறுவயதில் பயின்று பின்னர் மருத்துவத்துறைக்குச் சென்று விருதுநகரில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த மருத்துவர் வெள்ளைச்சாமி என்பவரே நான் குறிப்பிடப்போகும் மருத்துவர். காய்ச்சல் என வந்துவிட்டால் அவரிடம் ஓடிச் சென்று ஒரு பென்சிலின் கேட்டுப் போட்டுக்கொள்வதுண்டு. முதலில் பென்சிலின் அலர்ஜி இருக்கிறதா என ஆராய்ந்துவிட்டு தொடர்ந்து பென்சிலின் மறுக்காமல் போட்டுவிடுவார். காய்ச்சல் ஒரு வருடத்திற்கு எட்டிப் பார்க்காது.
1993 என நினைக்கின்றேன். நான் மதுரை கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டு இருந்தபோது 'தண்ணீர் சிகிச்சை முறை' என தினமும் காலையில் பல் துலக்கியதும் 500 மில்லி லிட்டருக்கு மேல் தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த சிகிச்சை முறையை ஆரம்பித்து ஒரு மாதம் இருக்கும். திடீரென ஒருநாள் காய்ச்சல் வந்துவிட்டது. அங்கே இருந்த ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு பென்சிலின் போடுங்கள் என கேட்டபோது, நான் ஸ்டெப்ட்ரோமைசின் தான் போடுவேன் என மறுத்துவிட்டார். இரண்டு தினங்களாக அதே மருந்தை போட்டும் பலனில்லை. மூன்றாவது நாள் மாதத் தேர்வு. நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனது கல்லூரி ஒரு பள்ளியை போல் செயல்பட்டது, நான் அகில இந்திய அளவில் நடந்த தேர்வில் வெற்றி பெற உதவியது எனலாம். மாதத் தேர்வு எழுதவில்லை என நினைக்கின்றேன்.
விடுதி காப்பாளர் என்னை ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். 'பார்மகாலஜி' தேர்வு ஆதலால் பார்மகாலஜி ஆசிரியரிடம் கூறிவிட்டு அன்றே வெள்ளைச்சாமி மருத்துவரை அணுகினேன், விபரங்கள் கூறினேன். 'பென்சிலின் வேண்டாம், இரத்த பரிசோதனைக்கு சென்று வா' என அனுப்பினார். இரத்த பரிசோதனை முடிவில் டைபாய்ட் என தெரிய வந்தது. டைபாய்டோ இருக்குமோ எனும் அச்சமே நான் உன்னை அனுப்பியதன் காரணம் என ஆருடம் சொன்னார்.
கவலைப்படாதே, சரியாகிவிடும் என குளோரம்பெனிக்கால் மாத்திரைகளை எழுதி தந்தார். நம்பிக்கையுடன் அந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், பத்து நாட்கள் பின்னரே குணமாகும் டைபாய்ட் நான்கே நாட்களில் குணமாகியது. குணமான அடுத்த தினமே கல்லூரிக்குச் சென்றேன், நண்பர்கள் ஆச்சரியப்பட்டனர். 'பார்மகாலஜி' ஆசிரியர் நீ பாடம் படித்தே உனக்கு நோய் விரைவில் குணமாகிவிட்டது என நகைச்சுவையாய் சொன்னார்.
ம் பாடம் படிப்பது? அன்றெல்லாம் கந்த சஷ்டி கவசம் அல்லவா தினமும் மனனமாய் படிப்பேன். மனன சக்தியை அதிகமாக்கிட உதவியது கந்த சஷ்டி கவசம் என்றால் மிகையில்லை. ஒரு வார்த்தை இடறினாலும் 'முருகா' என நினைப்பதுண்டு. இப்பொழுது ஒருவித அசட்டுத்தன்மை இருக்கிறது. ஆக அந்த வெள்ளைச்சாமி மருத்துவர் எனக்கு நோய் தீர்த்து வைப்பவராகவே தெரிந்தார். இப்பொழுதெல்லாம் ஒரு 'பாரஸிட்டமால்' நோய் தீர்க்கும் மருத்துவராக தெரிகிறது.
இப்படி பிளாசிபோ வினையை பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கி வைத்தார்.
'மருத்துவர் தான் மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் வைத்திருக்கும் நம்பிக்கையும், நோயாளி அந்த மருத்துவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது, இந்த பரஸ்பர நம்பிக்கை தரும் முடிவு ஒரு சக்தி வாய்ந்த சிகிச்சை முறையை உருவாக்குகிறது மட்டுமின்றி நோயினில் நல்ல முன்னேற்றமும் அந்த நோயை தீர்த்துவிடவும் உதவுகின்றது' - பிடர் ஸ்காரபேனக், ஜேம்ஸ் மெக்கார்மிக்.
பிளாசிபோ குறித்து இனி பார்ப்போம்.
எனது தந்தையுடன் சிறுவயதில் பயின்று பின்னர் மருத்துவத்துறைக்குச் சென்று விருதுநகரில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த மருத்துவர் வெள்ளைச்சாமி என்பவரே நான் குறிப்பிடப்போகும் மருத்துவர். காய்ச்சல் என வந்துவிட்டால் அவரிடம் ஓடிச் சென்று ஒரு பென்சிலின் கேட்டுப் போட்டுக்கொள்வதுண்டு. முதலில் பென்சிலின் அலர்ஜி இருக்கிறதா என ஆராய்ந்துவிட்டு தொடர்ந்து பென்சிலின் மறுக்காமல் போட்டுவிடுவார். காய்ச்சல் ஒரு வருடத்திற்கு எட்டிப் பார்க்காது.
1993 என நினைக்கின்றேன். நான் மதுரை கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டு இருந்தபோது 'தண்ணீர் சிகிச்சை முறை' என தினமும் காலையில் பல் துலக்கியதும் 500 மில்லி லிட்டருக்கு மேல் தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த சிகிச்சை முறையை ஆரம்பித்து ஒரு மாதம் இருக்கும். திடீரென ஒருநாள் காய்ச்சல் வந்துவிட்டது. அங்கே இருந்த ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு பென்சிலின் போடுங்கள் என கேட்டபோது, நான் ஸ்டெப்ட்ரோமைசின் தான் போடுவேன் என மறுத்துவிட்டார். இரண்டு தினங்களாக அதே மருந்தை போட்டும் பலனில்லை. மூன்றாவது நாள் மாதத் தேர்வு. நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனது கல்லூரி ஒரு பள்ளியை போல் செயல்பட்டது, நான் அகில இந்திய அளவில் நடந்த தேர்வில் வெற்றி பெற உதவியது எனலாம். மாதத் தேர்வு எழுதவில்லை என நினைக்கின்றேன்.
விடுதி காப்பாளர் என்னை ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். 'பார்மகாலஜி' தேர்வு ஆதலால் பார்மகாலஜி ஆசிரியரிடம் கூறிவிட்டு அன்றே வெள்ளைச்சாமி மருத்துவரை அணுகினேன், விபரங்கள் கூறினேன். 'பென்சிலின் வேண்டாம், இரத்த பரிசோதனைக்கு சென்று வா' என அனுப்பினார். இரத்த பரிசோதனை முடிவில் டைபாய்ட் என தெரிய வந்தது. டைபாய்டோ இருக்குமோ எனும் அச்சமே நான் உன்னை அனுப்பியதன் காரணம் என ஆருடம் சொன்னார்.
கவலைப்படாதே, சரியாகிவிடும் என குளோரம்பெனிக்கால் மாத்திரைகளை எழுதி தந்தார். நம்பிக்கையுடன் அந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், பத்து நாட்கள் பின்னரே குணமாகும் டைபாய்ட் நான்கே நாட்களில் குணமாகியது. குணமான அடுத்த தினமே கல்லூரிக்குச் சென்றேன், நண்பர்கள் ஆச்சரியப்பட்டனர். 'பார்மகாலஜி' ஆசிரியர் நீ பாடம் படித்தே உனக்கு நோய் விரைவில் குணமாகிவிட்டது என நகைச்சுவையாய் சொன்னார்.
ம் பாடம் படிப்பது? அன்றெல்லாம் கந்த சஷ்டி கவசம் அல்லவா தினமும் மனனமாய் படிப்பேன். மனன சக்தியை அதிகமாக்கிட உதவியது கந்த சஷ்டி கவசம் என்றால் மிகையில்லை. ஒரு வார்த்தை இடறினாலும் 'முருகா' என நினைப்பதுண்டு. இப்பொழுது ஒருவித அசட்டுத்தன்மை இருக்கிறது. ஆக அந்த வெள்ளைச்சாமி மருத்துவர் எனக்கு நோய் தீர்த்து வைப்பவராகவே தெரிந்தார். இப்பொழுதெல்லாம் ஒரு 'பாரஸிட்டமால்' நோய் தீர்க்கும் மருத்துவராக தெரிகிறது.
இப்படி பிளாசிபோ வினையை பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கி வைத்தார்.
'மருத்துவர் தான் மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் வைத்திருக்கும் நம்பிக்கையும், நோயாளி அந்த மருத்துவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது, இந்த பரஸ்பர நம்பிக்கை தரும் முடிவு ஒரு சக்தி வாய்ந்த சிகிச்சை முறையை உருவாக்குகிறது மட்டுமின்றி நோயினில் நல்ல முன்னேற்றமும் அந்த நோயை தீர்த்துவிடவும் உதவுகின்றது' - பிடர் ஸ்காரபேனக், ஜேம்ஸ் மெக்கார்மிக்.
பிளாசிபோ குறித்து இனி பார்ப்போம்.
Thursday, 12 February 2009
தலைவிதி தலைமதி - 5 பிரார்த்தனையும் நோயும்
இந்த ஆராய்ச்சி முடிவு வந்தவுடன் இதுகுறித்து என்னவெல்லாம் ஆராய்ச்சி வந்திருக்கிறது என அறிவியல் கட்டுரைகள் எல்லாம் தேடிப்பார்த்ததில் மூன்று கட்டுரைகள் மட்டுமே வெளிவந்து இருந்ததை அறிய முடிந்தது என்கிறார் ஸ்டீபென் பேரட். அந்த ஆராய்ச்சியானது பிரார்த்தனைகளினால் மக்களிடம் என்ன மாறுபாடு இருந்தது என கண்டறிய செய்யப்பட்ட ஆராய்ச்சி, அந்த மக்களுக்கு பிரார்த்தனை செய்வது பற்றி தெரியாமல் இருக்குமாறு வைக்கப்பட்ட ஆராய்ச்சி என்கிறார்.
இதில் ஒரு ஆராய்ச்சி பிரார்த்தனையினால் பலன் இருக்கிறது என சொன்னது ஆனால் செய்முறை முறையாக செயல்படுத்தவில்லை எனவும், மற்றொரு ஆராய்ச்சி பலன் இல்லை ஆனால் செய்முறை மிகவும் முறையாக செயல்படுத்தப்பட்டது எனவும் மற்ற ஆராய்ச்சி அத்தனை தெளிவாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பல ஆராய்ச்சி நூல் வெளியீட்டாளர்களையும், வாசகர்களையும் இது குறித்த ஆராய்ச்சி பற்றி ஏதேனும் மறுத்து இருக்கிறீர்களா, எத்தனை ஆராய்ச்சி கட்டுரை வெளியிட கோரி வந்தது என விசாரித்தபோது ஒருத்தரும் பதில் சொல்லவில்லை. அதற்கு பின்னர் தேடிப்பார்த்தபோது நான்கு ஆராய்ச்சி கட்டுரை வெளிவந்ததில் இரண்டு பலனிருப்பதாகவும், இரண்டு பலனில்லை எனவும் வந்ததாக குறிப்பிடுகிறார். இங்கேதான் இந்த அறிவியலும் அறியாமையில் தவிக்கிறது! நம்பிக்கையாளர்கள் என்ன சொல்வார்கள்? நம்பிக்கையற்றவர்கள் என்ன சொல்வார்க்ள்? உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
பைர்ட் ஆராய்ச்சி பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆராய்ச்சியாளரின் முடிவு நியாயமற்றது என்றார். வேறோரு பயம், மனநிலை மாற்றம் ஆராய்ச்சி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதில் பன்னிரண்டு வாரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு பிரார்த்தனை செய்யப்படவில்லை. இந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து பிரிவுமே முன்னேற்றம் கண்டது, இந்த இரண்டு பிரிவிலும் மாறுபாடு இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் ஆல்கஹால் குடிப்பழக்கத்தில் பிரார்த்தனை எந்த மாற்றம் செய்யவில்லை என மற்றொரு ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள் காட்டி உள்ளார்.
1999ல் வெளியிடப்பட்ட கான்ஸாஸ் நகரத்தில் நடந்த இருதய ஆராய்ச்சியானது மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டது என குறிப்பிட்ட அவர் அவர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் முன்னேற்றம் உள்ளது எனும் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையாக விமர்சித்துள்ளார். கணக்கியலில் 11 சதவிகிதம் முக்கியத்துவமாக இருக்கலாம், ஆனால் மருத்துவ முறையில் இது ஒன்றுமே இல்லை என்பதுதான் இவரது வாதம்.
2001ல் மாயோ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் எந்த முன்னேற்றம் இல்லை எனும் இருதயப்பிரிவு ஆராய்ச்சியை குறிப்பிட்டுள்ளார். பேரட் சொன்ன வார்த்தை இதுதான்
''மேலும் இது போன்ற பல ஆராய்ச்சிகள் எதிர்மறையான முடிவினை தந்தாலும் நம்பிக்கையாளர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை, அதேபோன்று மேலும் இதுபோன்ற பல ஆராய்ச்சிகள் நேர்மறையான முடிவுகள் தந்தாலும் நம்பிக்கையற்றவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளபோவதில்லை''
இதில் ஒரு ஆராய்ச்சி பிரார்த்தனையினால் பலன் இருக்கிறது என சொன்னது ஆனால் செய்முறை முறையாக செயல்படுத்தவில்லை எனவும், மற்றொரு ஆராய்ச்சி பலன் இல்லை ஆனால் செய்முறை மிகவும் முறையாக செயல்படுத்தப்பட்டது எனவும் மற்ற ஆராய்ச்சி அத்தனை தெளிவாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பல ஆராய்ச்சி நூல் வெளியீட்டாளர்களையும், வாசகர்களையும் இது குறித்த ஆராய்ச்சி பற்றி ஏதேனும் மறுத்து இருக்கிறீர்களா, எத்தனை ஆராய்ச்சி கட்டுரை வெளியிட கோரி வந்தது என விசாரித்தபோது ஒருத்தரும் பதில் சொல்லவில்லை. அதற்கு பின்னர் தேடிப்பார்த்தபோது நான்கு ஆராய்ச்சி கட்டுரை வெளிவந்ததில் இரண்டு பலனிருப்பதாகவும், இரண்டு பலனில்லை எனவும் வந்ததாக குறிப்பிடுகிறார். இங்கேதான் இந்த அறிவியலும் அறியாமையில் தவிக்கிறது! நம்பிக்கையாளர்கள் என்ன சொல்வார்கள்? நம்பிக்கையற்றவர்கள் என்ன சொல்வார்க்ள்? உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
பைர்ட் ஆராய்ச்சி பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆராய்ச்சியாளரின் முடிவு நியாயமற்றது என்றார். வேறோரு பயம், மனநிலை மாற்றம் ஆராய்ச்சி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதில் பன்னிரண்டு வாரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு பிரார்த்தனை செய்யப்படவில்லை. இந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து பிரிவுமே முன்னேற்றம் கண்டது, இந்த இரண்டு பிரிவிலும் மாறுபாடு இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் ஆல்கஹால் குடிப்பழக்கத்தில் பிரார்த்தனை எந்த மாற்றம் செய்யவில்லை என மற்றொரு ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள் காட்டி உள்ளார்.
1999ல் வெளியிடப்பட்ட கான்ஸாஸ் நகரத்தில் நடந்த இருதய ஆராய்ச்சியானது மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டது என குறிப்பிட்ட அவர் அவர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் முன்னேற்றம் உள்ளது எனும் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையாக விமர்சித்துள்ளார். கணக்கியலில் 11 சதவிகிதம் முக்கியத்துவமாக இருக்கலாம், ஆனால் மருத்துவ முறையில் இது ஒன்றுமே இல்லை என்பதுதான் இவரது வாதம்.
2001ல் மாயோ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் எந்த முன்னேற்றம் இல்லை எனும் இருதயப்பிரிவு ஆராய்ச்சியை குறிப்பிட்டுள்ளார். பேரட் சொன்ன வார்த்தை இதுதான்
''மேலும் இது போன்ற பல ஆராய்ச்சிகள் எதிர்மறையான முடிவினை தந்தாலும் நம்பிக்கையாளர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை, அதேபோன்று மேலும் இதுபோன்ற பல ஆராய்ச்சிகள் நேர்மறையான முடிவுகள் தந்தாலும் நம்பிக்கையற்றவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளபோவதில்லை''
Subscribe to:
Posts (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...