தலைவிதி :
சுருக்கமாகச் சொல்லப்போனால் எப்பொழுது தனிமனிதன் தன்னால் அனைத்து செயல்களையும் தனது கட்டுப்பாட்டுக் கொண்டுவர முடியாமல் தவித்தானோ அப்பொழுது அவனது மனதில் உதித்த எண்ணம்தான் தலைவிதி. எந்த ஒரு செயலுக்கும் காரணம் கற்பிக்க வேண்டும் என எப்பொழுது அவனது மனதில் தோன்றியதோ அப்பொழுது இடப்பட்ட விதைதான் தலைவிதி. ஒன்றைச் சார்ந்தே ஒன்று நடக்கின்றன என்னும் தத்துவமே இதன் அடிப்படை.
இதனால் என்ன நன்மை தீமை? நன்மை என எடுத்துக்கொண்டால் நடப்பது நமது கையில் இல்லை, அதனால் மனம் உடைந்து போய்விட வேண்டாம் என இதற்கு அதிபதியான இறைவனை துணைக்கு வைத்துக்கொண்டு அடுத்த அடுத்த காரியங்களில் இறங்கிவிடுவது. தீமை என்னவெனில் நமக்கு விதித்தது இவ்வளவுதான் என முடங்கிப்போய்விடுவது.
தலைவிதியை நிர்ணயம் செய்வது யார்? நாம். நமது செயலை நம்மால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும். நம்மை மீறி ஒன்று நடக்கிறது என்ற பிரமையை அகற்ற வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது என நமக்குத் தெரியாது என்பது சாதாரணமாக நடக்கக்கூடியதே அதை நாம் பக்குவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது செயல்களை முறைப்படுத்திட சுற்றுப்புற காரணிகள் மற்றும் நமது உடலில் ஓடுகின்ற ரசாயனங்கள் இதையெல்லாம் தாண்டிய எண்ணங்கள் மிகவும் முக்கியம். எனவே தலைவிதி என்பது நமக்கு நாமே விதித்துக்கொண்டது.
மரபியல் தத்துவமும் மூளையின் செயல்பாடும்:
மரபணுக்கள் மட்டுமே ஒரு மனிதருடைய குணாதிசயங்களை நிர்ணயித்துவிடுவதில்லை. மூளையின் செயல்பாடு மிகவும் முக்கியம். எப்பொழுது ஒரு மனிதன் எண்ண ஆரம்பித்தானோ அப்பொழுதே அவனது செயல்களில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. மரபணுக்கள் ஆதியிலிருந்து அத்தனை மாறுபாட்டை ஒன்றும் அடையவில்லை, ஆனால் மூளையில் பல மாறுபாடுகள் அடைந்து இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட மாறுபாடு மனிதனை இன்று இந்த அளவிற்கு சிந்திக்க வைத்து உள்ளது.
நாம் ஒருவரை பார்த்ததும் அட என்போம், மற்றொருவரை பார்க்கும் போது ம்ஹும் என்போம், இதற்கு காரணம் நமது மனதில் தோன்றும் எண்ணமே. சற்று நமது எண்ணங்களை பரிசீலித்தால் இருவருமே அட ஆவதற்கு சாத்தியம் உண்டு. மகிழ்ச்சி நமது மனதைப் பொருத்ததே என்பதுதான் எல்லா ஆன்மிக கோட்பாடுகளுக்கும் அடிப்படை.
அறிவியலும் ஆன்மிகமும்:
இரண்டும் ஒன்று என்பார் பலர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எப்பொழுது ஒன்று தனித்தனியாக பிரிகிறதோ அப்பொழுதே அது தனது தனித்தன்மையை காட்ட வேண்டும்.
இதைப்பற்றி விரிவாக தொடர்வோம். நீங்களும் தொடருங்கள். ஒவ்வொரு விசயங்களாக எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன், கற்றுக்கொள்ளும் முயற்சியே அன்றி கற்றுக்கொடுக்கும் முயற்சி அல்ல என்பதை மிகவும் தெளிவாக கூறிவிடுகிறேன்.
Wednesday, 11 February 2009
அறுபத்தி நான்காம் மொழி - 7 முடிவு முடிவு பா.
நாங்கள் பார்க்கச் சென்றவர் அதிக வயதானவராகத் தெரிந்தார். இதைப் படிம்மா என ஒரு காகித்தைத் தந்தார். நானும் படித்தேன்.
மண்ணில் துளையிட்டு
குடிகொள்ளும் ஈசல்களை
பெற்றோர்களும் உற்றார்களும்
வந்திருப்பதாய் பொய்க்கதை சொல்லி
ஆசையோடு வெளிவரும்போது
சிறகை உடைத்து நெருப்பிலிட்டு
சுவைகொள்ளும் நாவு
அன்பினை கேடயமாய்
அநீதிக்கு வைத்துக்கொள்ளும்
தீராநோய் கொண்ட நாவு
மானிட உயிருக்குள்
உள்ளிருக்கும் ஈசனை
மதிமயக்கும் மந்திரங்கள்
சொல்லி வெளிக்கொணர்ந்து
வீடொன்று கட்டி
தொலைத்துத் திரியும் நாவு
பக்தியை பகட்டுக்காக
பரவசத்துடன் சூறையாடும்
பாவநோய்கொண்ட நாவு
மெளனம்தனை மருந்தாய்
உட்கொண்டு மரிக்கும் நாள்வரை
இருக்குமெனின் தீராத நோயெல்லாம்
தீர்ந்து போகும்
பண்ணிய பாவமெல்லாம்
ஓடிப்போகும்
உள்ளுக்குள்ளே ஓசையொன்றை
உதடசைவின்றி
சொல்லிச் சிறக்கும் நாவு
இவ்வார்த்தைகளை உச்சரிக்காத நாவு!
இந்த கருமத்தை என்கையிலே ஏன் கொடுக்கிறாருனு நினைச்சிக்கிட்டு, அதுக்காக பேசாமலேயே நாம வாழ்ந்திர முடியுமானு அவர்கிட்ட வெடுக்கெனு கேட்டு வைச்சேன். சுந்தரி சும்மா இரு சரசு அப்படினு சொன்னா. பவளக்கொடி என்கிட்ட இருந்து வாங்கிப் படிச்சிட்டு மிங்கி மிங்கி பா அப்படினு சொன்னா. நாவரசன் ஒருவித தோரணையா மிங்கி மிங்கி பா சொன்னான். பத்தாததுக்கு மிங்கியும் மிங்கி மிங்கி பா சொன்னான்.
என்கிட்ட, மிங்கிகிட்ட, என் கணவர்கிட்ட, நாவரசுகிட்ட இரத்தம் எடுத்தவர் ரொம்ப நாளைக்கப்பறம் எங்களை வரச் சொன்னார். வரச் சொன்னவர் இது அறுபத்திநான்காம் மொழி அப்படினு சொல்ல ஆரம்பிச்சார். எனக்கு தலையை சுத்த ஆரம்பிச்சது. சங்கரியும் கூட வந்திருந்தா. அவர் சொன்னது சங்கரிக்கு ரொம்ப நல்லாவே புரிஞ்சிருச்சி போல. எனக்கு அவதான் விளங்கறமாதிரி சொன்னா.
நம்ம உடம்புல ஜீன் இருக்குதுல்ல அந்த ஜீன் புரோட்டின் எல்லாம் உருவாக உதவியா இருக்குமாம். பரம்பரை பரம்பரையா விசயங்களை பெற்றோரிலிருந்து பிள்ளைக்குக் கடத்தறது இந்த ஜீன் தானாம். ஒருத்தர் எப்படி இருக்கார், எப்படி வளருராருனு இந்த ஜீன் தீர்மானிச்சி வைச்சிருமாம்.
சகல ஜீவராசிகளுக்கும் இந்த ஜீன் இருந்தாலும் மனுசனைத் தவிர எந்தவொரு சிந்தனையும் இல்லாம தன்னையும் தன் வட்டத்தையும் காப்பாத்திக்கிட்டு மற்ற ஜீவராசிகள் வாழப் பழகிருக்காம். அப்படிப்பட்ட அந்த ஜீன், புரோட்டின் உருவாக்கறப்போ அதை நிறுத்த மூணு கோடான்கள் வைச்சிருக்குமாம். அந்த கோடான்களை உபயோகப்படுத்தி புரோட்டின் உருவாகறதை நிறுத்திக்குமாம். நம்ம சிந்தனையை கட்டுப்படுத்தக்கூடிய செயல்பாடு நரம்பு மண்டலத்தைச் சார்ந்து இருந்தாலும் இந்த ஜீன்களுக்கும் சம்பந்தம் இருக்காம். அறுபத்தி நாலு கோடான்கள்தான் மொத்தமாம். ஆனா மூணு கோடான்கதான் நிறுத்துமாம். அந்த கோடான்கள் என் பையன் விசயத்துல என் பையன் என்ன நினைச்சாலும் பேசற வார்த்தை மட்டும் இதுதானு தீர்மானிச்சிருச்சாம். என் பையனால எல்லாமே சிந்திக்க முடியும், எல்லாம் செய்ய முடியும், ஆனா வார்த்தை மட்டும் மிங்கி மிங்கி பா தானாம்.
இதுல என்ன கொடுமைன்னா அந்த ஜீன் என்கிட்டயும் இருக்காம். ஆனா அது என்கிட்ட வெளிப்படாம அடங்கிப் போயிருச்சாம். இல்லைன்னா நான் மிங்கி மிங்கி பா தான் சொல்லிட்டு இருந்திருப்பேனாம்.
சங்கரி சொன்னதும் அவர்கிட்ட ஏன் இப்படி வார்த்தைனு மிழுங்கி மிழுங்கிக் கேட்டேன். அய்யோ திரும்பவும் மிழுங்கியா? அதுக்கு அவர் சொன்னதை அப்படியே சொல்றேன்.
பொதுவா நமக்கு ஆசையோ விருப்பமோ இருந்தா பயத்துல அதை விழுங்கிருவோம். சூழ்நிலை சரியில்லைன்னா சொல்லவே மாட்டோம். இப்படி மனுசனோட அமைதியா வாழனும்ங்கிற ஆசை எல்லாம் சூழ்நிலையினால உள்ளுக்குள்ளே அமிழ்ஞ்சி போயிருச்சி. மேலோட்டமா எல்லாரும் அமைதியா வாழனும்னு சொன்னாலும் அந்த ஆசை நிறைவேறாத ஒண்ணுனு ஆயிருச்சி. இப்படி விழுங்கி வாழும் சமூகமாகவே மாறிட்டோம். யாரு எப்படிப் போனா, எந்த நாட்டுல குண்டு விழுந்தா நமக்கு என்னனும், சுனாமி பூகம்பம் வந்தா பூமிக்கு பாரம் தாங்கலை அதான் விழுங்குதுனு நாமதான் சரியான விழுங்கும் சமூகமா மாறிட்டோம். எதுக்கெடுத்தாலும் அந்த கவிதையில வரமாதிரிதான் வாழ பழகிட்டோம். மிங்கி அப்படின்னா தமிழுல முடிவு னு அர்த்தம். முடிவு முடிவு பா.
அதாவது அமைதிக்கு முடிவு கட்டிட்டோம், இந்த உலகத்துல அமைதியாவே இருக்க முடியாது அதைச் சொல்றதுதான் மிங்கி மிங்கி பா. முடிவு முடிவு பா.
ஆனா இதை மட்டுமே சொல்ற உங்க மகன்கிட்ட இருக்கிற அமைதி நம்மகிட்ட இல்லாம போனது துரதிர்ஷ்டம்தான்.
நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்ல ஆரம்பித்து இருந்தேன்.
முற்றும்.
மண்ணில் துளையிட்டு
குடிகொள்ளும் ஈசல்களை
பெற்றோர்களும் உற்றார்களும்
வந்திருப்பதாய் பொய்க்கதை சொல்லி
ஆசையோடு வெளிவரும்போது
சிறகை உடைத்து நெருப்பிலிட்டு
சுவைகொள்ளும் நாவு
அன்பினை கேடயமாய்
அநீதிக்கு வைத்துக்கொள்ளும்
தீராநோய் கொண்ட நாவு
மானிட உயிருக்குள்
உள்ளிருக்கும் ஈசனை
மதிமயக்கும் மந்திரங்கள்
சொல்லி வெளிக்கொணர்ந்து
வீடொன்று கட்டி
தொலைத்துத் திரியும் நாவு
பக்தியை பகட்டுக்காக
பரவசத்துடன் சூறையாடும்
பாவநோய்கொண்ட நாவு
மெளனம்தனை மருந்தாய்
உட்கொண்டு மரிக்கும் நாள்வரை
இருக்குமெனின் தீராத நோயெல்லாம்
தீர்ந்து போகும்
பண்ணிய பாவமெல்லாம்
ஓடிப்போகும்
உள்ளுக்குள்ளே ஓசையொன்றை
உதடசைவின்றி
சொல்லிச் சிறக்கும் நாவு
இவ்வார்த்தைகளை உச்சரிக்காத நாவு!
இந்த கருமத்தை என்கையிலே ஏன் கொடுக்கிறாருனு நினைச்சிக்கிட்டு, அதுக்காக பேசாமலேயே நாம வாழ்ந்திர முடியுமானு அவர்கிட்ட வெடுக்கெனு கேட்டு வைச்சேன். சுந்தரி சும்மா இரு சரசு அப்படினு சொன்னா. பவளக்கொடி என்கிட்ட இருந்து வாங்கிப் படிச்சிட்டு மிங்கி மிங்கி பா அப்படினு சொன்னா. நாவரசன் ஒருவித தோரணையா மிங்கி மிங்கி பா சொன்னான். பத்தாததுக்கு மிங்கியும் மிங்கி மிங்கி பா சொன்னான்.
என்கிட்ட, மிங்கிகிட்ட, என் கணவர்கிட்ட, நாவரசுகிட்ட இரத்தம் எடுத்தவர் ரொம்ப நாளைக்கப்பறம் எங்களை வரச் சொன்னார். வரச் சொன்னவர் இது அறுபத்திநான்காம் மொழி அப்படினு சொல்ல ஆரம்பிச்சார். எனக்கு தலையை சுத்த ஆரம்பிச்சது. சங்கரியும் கூட வந்திருந்தா. அவர் சொன்னது சங்கரிக்கு ரொம்ப நல்லாவே புரிஞ்சிருச்சி போல. எனக்கு அவதான் விளங்கறமாதிரி சொன்னா.
நம்ம உடம்புல ஜீன் இருக்குதுல்ல அந்த ஜீன் புரோட்டின் எல்லாம் உருவாக உதவியா இருக்குமாம். பரம்பரை பரம்பரையா விசயங்களை பெற்றோரிலிருந்து பிள்ளைக்குக் கடத்தறது இந்த ஜீன் தானாம். ஒருத்தர் எப்படி இருக்கார், எப்படி வளருராருனு இந்த ஜீன் தீர்மானிச்சி வைச்சிருமாம்.
சகல ஜீவராசிகளுக்கும் இந்த ஜீன் இருந்தாலும் மனுசனைத் தவிர எந்தவொரு சிந்தனையும் இல்லாம தன்னையும் தன் வட்டத்தையும் காப்பாத்திக்கிட்டு மற்ற ஜீவராசிகள் வாழப் பழகிருக்காம். அப்படிப்பட்ட அந்த ஜீன், புரோட்டின் உருவாக்கறப்போ அதை நிறுத்த மூணு கோடான்கள் வைச்சிருக்குமாம். அந்த கோடான்களை உபயோகப்படுத்தி புரோட்டின் உருவாகறதை நிறுத்திக்குமாம். நம்ம சிந்தனையை கட்டுப்படுத்தக்கூடிய செயல்பாடு நரம்பு மண்டலத்தைச் சார்ந்து இருந்தாலும் இந்த ஜீன்களுக்கும் சம்பந்தம் இருக்காம். அறுபத்தி நாலு கோடான்கள்தான் மொத்தமாம். ஆனா மூணு கோடான்கதான் நிறுத்துமாம். அந்த கோடான்கள் என் பையன் விசயத்துல என் பையன் என்ன நினைச்சாலும் பேசற வார்த்தை மட்டும் இதுதானு தீர்மானிச்சிருச்சாம். என் பையனால எல்லாமே சிந்திக்க முடியும், எல்லாம் செய்ய முடியும், ஆனா வார்த்தை மட்டும் மிங்கி மிங்கி பா தானாம்.
இதுல என்ன கொடுமைன்னா அந்த ஜீன் என்கிட்டயும் இருக்காம். ஆனா அது என்கிட்ட வெளிப்படாம அடங்கிப் போயிருச்சாம். இல்லைன்னா நான் மிங்கி மிங்கி பா தான் சொல்லிட்டு இருந்திருப்பேனாம்.
சங்கரி சொன்னதும் அவர்கிட்ட ஏன் இப்படி வார்த்தைனு மிழுங்கி மிழுங்கிக் கேட்டேன். அய்யோ திரும்பவும் மிழுங்கியா? அதுக்கு அவர் சொன்னதை அப்படியே சொல்றேன்.
பொதுவா நமக்கு ஆசையோ விருப்பமோ இருந்தா பயத்துல அதை விழுங்கிருவோம். சூழ்நிலை சரியில்லைன்னா சொல்லவே மாட்டோம். இப்படி மனுசனோட அமைதியா வாழனும்ங்கிற ஆசை எல்லாம் சூழ்நிலையினால உள்ளுக்குள்ளே அமிழ்ஞ்சி போயிருச்சி. மேலோட்டமா எல்லாரும் அமைதியா வாழனும்னு சொன்னாலும் அந்த ஆசை நிறைவேறாத ஒண்ணுனு ஆயிருச்சி. இப்படி விழுங்கி வாழும் சமூகமாகவே மாறிட்டோம். யாரு எப்படிப் போனா, எந்த நாட்டுல குண்டு விழுந்தா நமக்கு என்னனும், சுனாமி பூகம்பம் வந்தா பூமிக்கு பாரம் தாங்கலை அதான் விழுங்குதுனு நாமதான் சரியான விழுங்கும் சமூகமா மாறிட்டோம். எதுக்கெடுத்தாலும் அந்த கவிதையில வரமாதிரிதான் வாழ பழகிட்டோம். மிங்கி அப்படின்னா தமிழுல முடிவு னு அர்த்தம். முடிவு முடிவு பா.
அதாவது அமைதிக்கு முடிவு கட்டிட்டோம், இந்த உலகத்துல அமைதியாவே இருக்க முடியாது அதைச் சொல்றதுதான் மிங்கி மிங்கி பா. முடிவு முடிவு பா.
ஆனா இதை மட்டுமே சொல்ற உங்க மகன்கிட்ட இருக்கிற அமைதி நம்மகிட்ட இல்லாம போனது துரதிர்ஷ்டம்தான்.
நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்ல ஆரம்பித்து இருந்தேன்.
முற்றும்.
Tuesday, 10 February 2009
அறுபத்தி நான்காம் மொழி - 6
அப்படி ஒரு வார்த்தையை நான் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. சங்கரி அந்த பொண்ணு பாலையம்பட்டியைச் சேர்ந்தவள் என்று சொன்னாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. பழனிச்சாமி அடுத்த முகூர்த்தத்திலேயே பவளக்கொடியின் திருமணம் வைக்கலாம் என்று சொன்னாலும் சங்கரியின் மகன் கல்யாணம் தடையாய் இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் வைக்கலாம் என முடிவு செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். முறைப்படியான நிச்சயதார்த்தம் எல்லாம் செய்து முடித்தோம்.
கல்யாணமும் சிறப்பாக நடைபெற்றது. கல்யாணம் முடித்து எங்க ஊருக்கு கிளம்பு முன்னர் உனக்கொரு பிள்ளை பிறந்து அந்த பிள்ளையும் மிங்கி மிங்கி பா சொன்னா என்ன பண்ணுவ என ஒரு விளங்காத பாட்டி பவளக்கொடியிடம் விளக்கம் கேட்டு வைத்தாள். நானும் பயத்தோடு பவளக்கொடி என்ன சொல்வாளோ எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். பவளக்கொடி மிங்கி மிங்கி பா வை மட்டுமே நான் பேசுவேன் என்றாள். அடி ஆத்தி என முகவாயில் கையை வைத்தாள் பாட்டி.
பவளக்கொடி சொன்னதைக் கேட்டதும் எனக்கு பெரிய தப்பு பண்ணிவிட்டோமோ என மனசு பதறியது. நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசி இருக்க வேண்டுமோ என நினைத்தேன். அப்படியெல்லாம் குழந்தை பிறக்காது. இது என்ன சாபமா என இருந்துவிட்டேன். மாதங்கள் ஓட கருவுற்றாள் பவளக்கொடி. எனக்குப் பயமாகத்தான் இருந்தது. நாவரசன் இன்னும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொன்னான். ஒருநாள் பவளக்கொடியிடம் நீ அவனுக்கு பேசக் கற்றுக்கொடுப்பாய் என ஆசைப்பட்டேன். நீ முயற்சிக்கவில்லையா என்றேன். எனக்கு மிங்கி மிங்கி பா தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லி மட்டும் நிறுத்திக்கொண்டாள்.
குழந்தை பிறந்தது. மிங்கி என பெயர் வைத்தாள். எனக்கு கோபமாகப் போய்விட்டது. என்ன நீ, இப்படி பெயர் வைத்திருக்கிறாய் என்றேன். இந்தப் பெயருக்கு என்ன அத்தை? என சொல்லிவிட்டாள். நான் பவளக்கொடியிடம் சண்டையே போடுவதில்லை. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
குழந்தை வளர்ந்தது. ங்கா சொல்லாமலே வளர்ந்தது. ம்மாவும் சொல்லவில்லை. ஆனால் முகமெல்லாம் புன்னகை. நாட்கள் வளர என் பேரப்பையன் வார்த்தை பேச ஆரம்பித்தான். மி...ங்...கி மி...ங்...கி பா. எனக்கு பகீரென ஆகிவிட்டது. பவளக்கொடியோ சந்தோசமாக கொஞ்ச ஆரம்பித்தாள். அவளும் பதிலுக்கு மிங்கி மிங்கி பா என்றே சொன்னாள். நாவரசன் பற்றி சொல்லவா வேண்டும். என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். ஹூம், தந்தையைப் போல பிள்ளையாம்.
இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட சங்கரி என் வீட்டுக்கு ஓடி வந்தாள். ''சரசு சரசு உன் மகனையும், பேரனையும் என்னோட அனுப்பறியா, நான் அவங்களை ஒருத்தர் கிட்ட கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்'' என சொன்னாள். ''உன் பேத்தி நல்லாதானே பேசுறா'' என்றேன். ''ஆமா சரசு அவ நல்லாதான் பேசுற, நீயும் கூட வா'' என அழைத்தாள். ஆச்சரியமா இருந்தாலும் சரி போய்தான் பார்ப்போமே என நாங்கள் சங்கரியுடன் கிளம்பினோம்.
(தொடரும்)
கல்யாணமும் சிறப்பாக நடைபெற்றது. கல்யாணம் முடித்து எங்க ஊருக்கு கிளம்பு முன்னர் உனக்கொரு பிள்ளை பிறந்து அந்த பிள்ளையும் மிங்கி மிங்கி பா சொன்னா என்ன பண்ணுவ என ஒரு விளங்காத பாட்டி பவளக்கொடியிடம் விளக்கம் கேட்டு வைத்தாள். நானும் பயத்தோடு பவளக்கொடி என்ன சொல்வாளோ எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். பவளக்கொடி மிங்கி மிங்கி பா வை மட்டுமே நான் பேசுவேன் என்றாள். அடி ஆத்தி என முகவாயில் கையை வைத்தாள் பாட்டி.
பவளக்கொடி சொன்னதைக் கேட்டதும் எனக்கு பெரிய தப்பு பண்ணிவிட்டோமோ என மனசு பதறியது. நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசி இருக்க வேண்டுமோ என நினைத்தேன். அப்படியெல்லாம் குழந்தை பிறக்காது. இது என்ன சாபமா என இருந்துவிட்டேன். மாதங்கள் ஓட கருவுற்றாள் பவளக்கொடி. எனக்குப் பயமாகத்தான் இருந்தது. நாவரசன் இன்னும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொன்னான். ஒருநாள் பவளக்கொடியிடம் நீ அவனுக்கு பேசக் கற்றுக்கொடுப்பாய் என ஆசைப்பட்டேன். நீ முயற்சிக்கவில்லையா என்றேன். எனக்கு மிங்கி மிங்கி பா தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லி மட்டும் நிறுத்திக்கொண்டாள்.
குழந்தை பிறந்தது. மிங்கி என பெயர் வைத்தாள். எனக்கு கோபமாகப் போய்விட்டது. என்ன நீ, இப்படி பெயர் வைத்திருக்கிறாய் என்றேன். இந்தப் பெயருக்கு என்ன அத்தை? என சொல்லிவிட்டாள். நான் பவளக்கொடியிடம் சண்டையே போடுவதில்லை. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
குழந்தை வளர்ந்தது. ங்கா சொல்லாமலே வளர்ந்தது. ம்மாவும் சொல்லவில்லை. ஆனால் முகமெல்லாம் புன்னகை. நாட்கள் வளர என் பேரப்பையன் வார்த்தை பேச ஆரம்பித்தான். மி...ங்...கி மி...ங்...கி பா. எனக்கு பகீரென ஆகிவிட்டது. பவளக்கொடியோ சந்தோசமாக கொஞ்ச ஆரம்பித்தாள். அவளும் பதிலுக்கு மிங்கி மிங்கி பா என்றே சொன்னாள். நாவரசன் பற்றி சொல்லவா வேண்டும். என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். ஹூம், தந்தையைப் போல பிள்ளையாம்.
இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட சங்கரி என் வீட்டுக்கு ஓடி வந்தாள். ''சரசு சரசு உன் மகனையும், பேரனையும் என்னோட அனுப்பறியா, நான் அவங்களை ஒருத்தர் கிட்ட கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்'' என சொன்னாள். ''உன் பேத்தி நல்லாதானே பேசுறா'' என்றேன். ''ஆமா சரசு அவ நல்லாதான் பேசுற, நீயும் கூட வா'' என அழைத்தாள். ஆச்சரியமா இருந்தாலும் சரி போய்தான் பார்ப்போமே என நாங்கள் சங்கரியுடன் கிளம்பினோம்.
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...